Monday, February 21, 2011

இன்று தென் சூடான், நாளை தமிழீழம்

இரத்தம் சிந்தாமல், துன்பங்களை சந்திக்காமல் கிடைப்பது அல்ல விடுதலை. இப்பாரிய போராட்டங்களின் பின்னர் கிடைப்பதுவே உண்மையான விடுதலை. இழப்புக்களை சந்திக்காமல், இழப்புக்களின் வலியை உணராமல் விடுதலை பெறும் மக்கள் எத்தனை காலமாகினாலும் வாழ்வில் எந்தவித மாற்றத்தையும் காண முடியாது. இவர்கள் இருண்ட வாழ்க்கையையே நடத்திக் கொண்டிருப்பார்கள். பல போராட்டங்கள் செய்து விடுதலை பெறும் மக்கள், தாம் பட்ட துன்பங்கள் தமது எதிர்கால சந்ததிக்கு வந்துவிடக் கூடாதென்கிற நோக்குடன் துணிச்சலுடன் செயலாற்றி தம்மையும், தமது தேசத்தையும் உயர்த்துவதற்காக கடினமாக உழைப்பார்கள்.
இப்புதிய ஆண்டில் ஆபிரிக்க கண்டத்தில் உருவாகப்போகும் தென் சூடான் என்கிற புதியநாடு, விடுதலை வேண்டி நிற்கும் தேசங்களுக்கெல்லாம் புதுத்தென்பைக் கொடுத்து வரலாற்றில் நிலைபெற்றிருக்கப் போகின்றது. விடுதலைக்காக போராடிய தேசங்களின் வரிசையில் இன்று தென் சூடான் விடுதலை பெறுகிறது. நாளை விடுதலை பெறப்போகும் தேசங்களில் தமிழீழமே முன்னிடத்தில் உள்ளது.
பிரித்தானியர்களினதும் எகிப்தியர்களினதும் காலனித்துவ நாடாகவிருந்த சூடான், ஜனவரி 1, 1956-இல் விடுதலை பெற்றது. ஏறத்தாழ 43 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட நாடு. இதன் பரப்பளவு ஏறத்தாழ 2.5 மில்லியன் சதுர கிலோமீட்டர். தென் பகுதியில் கிறிஸ்தவர்களும், வட பகுதியில் முஸ்லிம்களும் வாழ்ந்து வருகின்றார்கள். இந்த இரண்டு தேசங்களும் இனரீதியாகவும், மதரீதியாகவும் தனித்துவமானவை. சூடானின் அடக்குமுறை அரசிற்கு எதிராக கிளர்ந்தெழுந்த தென் சூடானிய மக்கள், தமது தேசத்திற்கான விடுதலைக்காக சூடான் விடுதலைபெற்ற காலப்பகுதிகளிலிருந்தே ஆரம்பித்த போராட்டம் பல்வேறு கட்டங்களாக பயணித்து, பல்வேறு இராஜதந்திர நகர்வுகள் ஊடாக நகர்ந்து, பல்வேறு சதிவலைகளில் சிக்கியபோதும் எழுந்துநிமிர்ந்துநின்ற தென் சூடானிய தேசத்து மக்களின் விடுதலைக்கான போர், தற்போது அதன் உச்சத்தை தொட்டுள்ளது.
பதினேழு வருடங்கள் தொடர்ந்த முதலாம் கட்டப்போரும், அதனைத் தொடர்ந்த சமாதான உடன்படிக்கையும், அதன்பின்னர் 1983-இல் ஆரம்பித்த இறுதிப்போரும், அதன் தொடர்ச்சியாக வந்த ஒப்பந்தத்தின் பலனாக தற்போது சர்வசன வாக்கெடுப்பு ஒன்று நடத்துகின்ற நிலைக்கு இரண்டு தேசங்களும் இணங்கி அதிலும் வெற்றி கண்டார்கள். 1983-இல் ஆரம்பித்த உக்கிரமான போரில் குறைந்தது இரண்டு மில்லியன் மக்கள் கொல்லப்பட்டும் பல மில்லியன் கணக்கானோர் இடம்பெயர்ந்தும் உள்ளனர்.
பல ஆண்டுகால பகைமைக்கு பின்னர் வட சூடானை மையமாக கொண்ட மேலாதிக்கவாத அரசு தென் சூடானிய மக்களின் பிரிந்து செல்வதற்கான உரிமையை ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. மேற்குலக அரசுகளின் முயற்சியால் தற்போதைய சூடானிய அரச அதிபர் ஓமர் அல்பசீர் போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு சர்வதேச நீதிமன்றத்தில் பிடியாணை வழங்கப்பட்டுள்ள நிலையிலுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈழத்தமிழரின் போராட்டத்திற்கும், தென் சூடானிய போராட்டத்திற்கும் பல இணக்கப்பாடுகளை காண முடியும். சிறிலங்கா சுதந்திரம் அடைந்த நாள் முதல் 1983 வரை தமிழ் தலைமைகள் பல போராட்டங்களை செய்தது. பல்லாயிரம் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இவைகள் அனைத்தையும் எதிர்த்துப் போராடி, தமிழீழ சுதந்திர நாட்டை உருவாக்க பிறந்தது பல தமிழ்ப் போராளி அமைப்புக்கள். எப்படி தென் சூடானுக்கு அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆதரவாக இருந்ததோ, அதைப்போலவே தமிழீழ போராளிகளுக்கும் இந்தியா உதவிக்கரமாக இருந்தது.
எப்படி சூடான் மக்கள் விடுதலை இயக்கம் தென் சூடானின் விடுதலைக்காக 1983 ஆண்டில் ஆயுதப்போரை மேற்கொண்டதோ, அதைப்போலவேதான் விடுதலைப்புலிகள் அமைப்பும் அதே ஆண்டில் தமிழீழ விடுதலைக்காக போரை ஆரம்பித்தார்கள். தற்போதைய சூடானிய அரச அதிபர் ஓமர் அல்பசீர் போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு சர்வதேச நீதிமன்றத்தில் பிடியாணை வழங்கப்பட்டுள்ள நிலையிலுள்ளாரோ, அதைப்போலவேதான் சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராசபக்சேவும் போர்க்குற்றம் புரிந்தவராக உலக நாடுகளினால் வர்ணிக்கப்படுகிறார்.
நம்பிக்கையே வாழ்க்கை
ஏறத்தாழ எட்டு மில்லியன் மக்கள் தொகை கொண்ட தென் சூடான் தேசத்தில், 4.5 மில்லியன் மக்கள் வாக்களிப்பு தகைமையை கொண்டிருக்கின்றார்கள். ஏறத்தாழ 619,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டதுடன், உகண்டா, கென்யா, எதியோப்பியா மற்றும் கொங்கோ நாடுகளுடன் எல்லைகளைக் கொண்டதுதான் தென் சூடான்.
ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றுக்கும், தென் சூடானிய போராட்ட வரலாற்றுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இரு போராட்டங்களும் 1983-ஆம் ஆண்டிலேதான் ஆயுதப் போரின் மூலமேதான் தமது விடுதலையை வென்றெடுக்கலாம் என்கிற சிந்தனையுடன் ஆயுதப் போரை மேற்கொண்டனர். தென் சூடான் மக்களின் தன்னாட்சி உரிமையை ஏற்றுக்கொள்வதாக 1989-ஆம் ஆண்டு அப்போதைய சூடான் அதிபர் அறிவித்திருந்தார்.
ஆனால் அதே காலத்தில் ஏற்பட்ட இராணுவ சதிப்புரட்சியில் ஆட்சிப் பீடமேறிய இப்போதைய அரசு அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறி தொடர்ந்தும் போரில் ஈடுபட்டது. தொடர்ந்த போரும் அழிவுகளும் 2005-ஆம் ஆண்டு அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட சமாதான உடன்படிக்கை மூலம் ஓரளவுக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டன.
ஈழ விடுதலைப் போராளிகளும், சூடான் மக்கள் விடுதலை இயக்கம் போன்றே பல பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்கள். இவைகள் அனைத்தையும், சிங்கள அரசு ஏற்கவில்லை. நோர்வே அனுசரணையுடன் சூடான் அரசுக்கும் தென் சூடான் அமைப்பிற்கும் இடையில் 2002-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு இடைக்கால ஒழுங்கு பற்றிய உடன்பாடு காணப்பட்டது. இந்த உடன்பாட்டின்படி தென் சூடான் தனது போரினால் பாதிக்கப்பட்ட இடங்களை புனரமைப்பதுடன், முக்கிய கட்டமைப்புடன் தென் சூடான் மக்களின் சுய நிர்ணைய உரிமையும் அங்கீகரிக்கப்பட்டது. அதாவது வடக்கு சூடானும் தெற்கு சூடானும் சேர்ந்து வாழ்வதா பிரிந்து செல்வதா என்ற உரிமையினையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதே நோர்வேதான் அதே 2002-ஆம் ஆண்டில் சிறிலங்கா அரசிற்கும், புலிகளுக்கும் இடையில் தனது நேரடி மத்தியஸ்தத்தின் கீழான சமாதான ஒப்பந்தத்தை செய்தது. விடுதலைப்புலிகளால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அரச திட்டத்தினை சிறிலங்கா அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கு சர்வதேச நாடுகளின் குறிப்பாக, இணைத்தலைமை நாடுகளின் அசமந்த போக்கும் ஓர் காரணமாக இருந்தது. அத்துடன் இந்தியாவின் தலையீடும் காரணம் என பரவலாக கருதப்பட்டது. ஆனால், சூடானுடைய இடைக்கால திட்டத்தினை சர்வதேசம் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு அதனை நடைமுறைப்படுத்துவதில் அமெரிக்காவும் நோர்வேயும் ஒற்றைக்காலில் நின்றனர். இதனால் வடக்கு சூடான் ஆட்சியாளருக்கு இடைக்கால சபையினை நடைமுறைப்படுத்துவதினைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.
சர்வதேசத்தின் ஒருங்கிணைந்த அழுத்தம் காரணமாக இடைக்கால நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்பட்டது. உண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதனை விட நடைமுறையில் உள்ளதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றுதான் கூறவேண்டும். காரணம் வடக்கு சூடானிய ஆட்சியாளர்கள் தென் சூடானிற்கு ஒப்பந்தத்தில் கூறியது போல் எதுவும் செய்யவில்லை. புனர்வாழ்வும் செய்து கொடுக்கவில்லை, அபிவிருத்தியும் செய்யப்படவில்லை. மாறாக, தெற்கு சூடானியரின் எண்ணெயினை அகழ்ந்து சீனாவிற்கு கொடுத்தவண்ணம் இருந்தது.
எது என்னவாயினும், நோர்வே தலைமையில் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பிரகாரம் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி, வாக்களிக்க தகமையுடைய 4.5 மில்லியன் மக்களில் 60 விழுக்காட்டினர் தென் சூடான் பிரிந்து செல்வதை ஏற்று வாக்களித்தால்தான் விடுதலையை பெற முடியும் என்று ஒப்புக்கொண்டார்கள். அதன்படியே, ஜனவரி 9-ஆம் நாள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த வாக்கெடுப்பு, ஜனவரி 15-ஆம் தேதி ஏழு நாட்களுக்கு தொடர்ச்சியாக நடைபெற்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. புலம்பெயர்ந்து வாழும் தென் சூடான் மக்களும் இவ்வாக்களிப்பில் பங்கு கொண்டார்கள். குறிப்பாக ஆஸ்திரேலியா, கனடா, எகிப்து, எதியோப்பியா, கென்யா, உகண்டா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா போன்ற எட்டு நாடுகளிலிருந்து இத்தேர்தலில் அம்மக்கள் வாக்களித்தார்கள்.
வட சூடானின் பல அழுத்தங்களுக்கு மத்தியிலும், தென் சூடான் பிரிந்து செல்லுவதற்கு ஆதரவாக ஏறத்தாள 99 விழுக்காடு மக்கள் வாக்களித்துள்ளார்கள் என கூறினாலும், பிப்ரவரி 14, 2011 அன்றே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். நடைமுறையிலுள்ள ஒப்பந்தப்படி ஆறுமாதங்களுக்கு பின்னர் அதாவது ஜூலை 9-ஆம் தேதியே தென் சூடான் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட முடியும். ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புக் குழுவினரால் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 9, 2011 முதல் ஐ.நா.வின் 193 ஆவது நாடாக தென் சூடானின் உலக அரங்கில் அதன் தேசியக்கொடி பறக்கவிடப்படும். இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையெனும் உலக அமைப்பில் 51 நாடுகளே உறுப்பு நாடுகளாக இணைக்கப்பட்டன. 1991-ஆம் ஆண்டிலிருந்து 1994-ஆம் ஆண்டுவரை 166 உறுப்பு நாடுகளை கொண்ட ஐ.நா., இக்காலப்பகுதியில் 184 நாடுகள் உறுப்பு நாடுகளாக இருந்தது குறிப்பாக 19 நாடுகள் குறித்த நான்கு வருடங்களுக்குள் இணைந்தன.
முன்னாள் சோவியத் ஒன்றியம் பிளவுபட்டு பல நாடுகள் உருவாகியதே, பல நாடுகள் உருவாகக் காரணமாக இருந்தது. மோண்ரிநீக்ரோ என்கிற நாடு 192 ஐநாவின் உறுப்பு நாடாக மே 21, 2006-இல் இணைக்கப்பட்டது. செர்பியாவிடம் இருந்து பிரிந்து தனிநாடாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்கிற போராட்டத்தின் விளைவே, மோண்ரிநீக்ரோ நாட்டு மக்களும் தேர்தல் மூலமாக தமது விருப்பை வெளிப்படுத்தி பிரிந்தார்கள். கிழக்கு தீமோரும் இந்தோனேசியாவின் அடக்கு முறைகளிலிருந்து விடுவிக்கப் போராடி, மே 20, 2002 விடுதலை பெற்றது.
தமிழீழ கட்டுமானத்தின் ஒத்திகை தென் சூடானில்
விடுதலைப்புலிகள் யாழ் குடாநாட்டை தமது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருந்த வேளையில் பல கட்டுமானப் பணிகளை செய்திருந்தார்கள். எதிரியே மூக்கில் விரலைவைத்து ஏங்குமளவு பல கட்டுமானங்களை செய்திருந்தார்கள். இவைகள் அனைத்தையும் சிங்கள அடக்கு முறை அரச படையினர் அழித்தார்கள். தளம் மாறிச் சென்ற புலிப்படையினர், வன்னியை கைப்பற்றி தமது முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருந்த வேளையில் தனி அரசையே நடைமுறையில் வைத்திருந்தார்கள்.
நீதித்துறை முதல் பல அரச அமைப்புக்களை நிர்மாணித்து, அவற்றை வெற்றிகரமாக நடைமுறையில் வைத்திருந்தார்கள். எந்தக்குற்றமும் இல்லையென்று சொல்லுமளவு சட்டம் ஒழுங்கு காக்கப்பட்டது தமிழீழ காவல்துறையினரால். இப்படியாக இருந்த விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டு, ஏதோ பயங்கரவாதத்தை அடியோடு அழிப்பதாக கூறி படையெடுத்து பால்லாயிரம் பொதுமக்களைக் கொன்றும் பல்வேறு அட்டூழியங்களை செய்தது சிங்கள அரசு.
இறுதிப்புலி இருக்கும்வரை தமிழீழ லட்சியம் அழியாது என்று கூறினார் புலிகளின் தலைவர் பிரபாகரன். இன்னுமொரு படிமேல் சென்று சொல்வதேயானால், இறுதித்தமிழன் இருக்கும்வரை தமிழீழம் அடையாமல் இருக்கப் போவதில்லை. அன்று புலிகளின் கட்டுமானத்தை அழித்ததாக பறை சாற்றினார்கள். ஆனால், இன்று புதிதாக உருவாகப் போகும் தென் சூடான் நாட்டிற்கு நாடுகடந்த தமிழீழ அரச பிரதிநிதிகளுக்கு அழைப்பு சூடான் மக்கள் விடுதலை இயக்கத்திடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசு தெரிவித்துள்ளது. தென் சூடானின் கட்டுமானப்பணிகளிலும் தமிழீழத்தை சேர்ந்த பொறியியலாளர்கள் ஈடுபடவுள்ளார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வழைப்பு தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"தனிநாட்டுக்கான வாக்கெடுப்பு முடிவடைந்தவுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை தென்சூடானுக்கு வருமாறு சூடான் மக்கள் விடுதலை இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. கொண்டாட்டங்களில் பங்குகொள்ளவும் பொருத்தமான துறைகளில் தென்சூடானின் மேம்பாட்டுக்குத் தமிழர் தரப்பு வல்லுநர்களின் உதவி வழங்கல் பற்றி ஆராய்வதற்காகவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரதிநிதிகள் குழுவொன்றை அனுப்புகிறது. சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் விருந்தினர்களாக வருகைதரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் குழுவினை சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் உயரதிகாரிகள் வரவேற்பார்கள். நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் ஏனைய நாடுகளின் தலைவர்களையும் அங்கு சந்திக்கவுள்ளார்கள்".
தமிழீழ வல்லுனர்களின் செயற்பாடு தென் சூடானில் இடம்பெற இருப்பதானது மிகவும் வரவேற்கத்தக்க நிகழ்வே. இப்படியான செயல்கள் மூலமாக நாளை மலர இருக்கும் தமிழீழ தேசத்தை கட்டியெழுப்ப இவ்வல்லுனர்களின் அனுபவமே போதும். அத்துடன், தென் சூடானும் தனது விசுவாசத்தை தமிழீழ தேசத்தின் மீதும் அதன் மக்கள் மீதும் காண்பித்து, ஒரு வருடம் அல்ல, பல்லாயிரம் வருடங்களாக உறவுகளைப் பேணுவதற்கு உறுதுணையாக இருக்கும். ஈழத்தில் இன்று அகலக்கால் பதித்து நிற்கும் சிங்கள அரக்கர்கள் தமிழீழத்தை சிதைக்க எத்தனை நிகழ்வுகளைச் செய்தாலும், தமிழீழ வேங்கைகள் உலக அரங்கிலேயே அகலக் கால் பதித்து வேலைகளை செய்கிறார்கள்.
சூடான் நாட்டின் ஐந்தில் நான்கு பகுதி எண்ணெய் வளம் தென் சூடானிலேயே இருப்பதுடன், கடல் வளம் உள்ள நாடாகவே தென் சூடான் உள்ளது. செங்கடல், சுயெஸ் கால்வாய், இந்து மா கடல் என்பவற்றின் ஊடாக அமைந்துள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடற்பாதைகளின் பாதுகாப்பிற்கும் அதை ஒட்டிய வேறு அலுவல்களுக்கும் சூடானின் புவியியல் அமைவிடம் இன்றியமையாதது. இவைகளைக் குறிவைத்தே அமெரிக்கா மற்றும் அதன் தோழமை நாடுகள் தென் சூடானின் விடுதலைக்கு ஆதரவாக இணைந்தார்கள் போலும். எது என்னவாக இருந்தாலும், மேற்கத்தைய நாடுகளின் செயல்களினால் ஆத்திரமடைந்த சூடானிய இஸ்லாமிய அரசு (இப்போ வடக்கு சூடான்) தென் சூடானின் எண்ணெய் வளத்தை பயன்படுத்தி மேற்குலகத்திற்கு எதிராக சீனாவை பயன்படுத்த திட்டமிட்டு அதன்படி செய்தது.
உண்மையில் ராசபக்சேவும் இதே பாணியினைத்தான் தனது ஆட்சியில் கையாண்டு வருகின்றார். ஆனால் ராசபக்சே எண்ணெய்யினை காட்டி சீனாவை வைத்திருக்கவில்லை மாறாக கடற்பிராந்திய போக்குவரத்தினை வைத்தே தனது காய்களை நகர்த்துகின்றார்.
விடுதலைக்கான போராட்டங்களை செய்துவரும் ஈழ, செச்சினிய, பாலஸ்தினிய, குர்திஷ் மற்றும் காஷ்மீரிய தேசங்களும் வெகு சீக்கிரத்தில் விடுதலையை எப்படி தென் சூடான் இன்று பெற்றதோ அதைப்போலவே இத்தேசங்களும் வெற்றிகரமாக விடுதலையை வென்றெடுப்பார்கள்.
விடுதலைக்காக போராடி வரும் தேசங்களின் வரிசையில் அடுத்து தமிழீழத் தேசமே பிறப்பெடுக்கும். இதனை வென்றெடுக்க வேகமாக்க வேண்டிய பொறுப்பு ஈழத்தில் வதியும் மக்களிடம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் சிதறிக்கிடக்கும் அனைத்து தமிழர்களின் கைகளிலேயுமே தங்கியுள்ளது.
நடந்த சம்பவங்களை மனதில் நிறுத்தி, பட்ட துன்பங்களை படிக்கல்லாக மாற்றி தமிழீழத்தை கட்டியெழுப்பி, அதனை பிரசுரிப்பதுவே அனைத்து தமிழர்களின் தலையாய பணி.
தமிழர்களின் தாகம்! தமிழீழத் தாயகம்!

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு - காத்திருக்கும் அபாயம்?

உலகில் மேற்கொள்ளப்படும் இத்தகைய பணிகளில் மிகப்பெரும் பணி என்று 2011ம் ஆண்டு இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணி வர்ணிக்கப்படுகின்றது. இது வளர்ச்சிப் பணிகளை திட்டமிடுவதற்கும், செயல்படுத்துவதற்கும் பயன்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார். ஏற்கனவே தெரிந்துள்ள விவரங்களை வைத்து இவர்கள் என்ன பெரிதாகக் கிழித்து விட்டார்கள் என்கின்ற கேள்வி ஒரு பக்கம் எழுகின்றது. வறுமை, வேலையின்மை, விலைவாசி உயர்வு, பட்டினிச் சாவுகள், விவசாயிகள் தற்கொலை, அடிப்படை வசதிகளின்மை, குடிநீர்ப் பற்றாக்குறை என்று இன்மைகளின் பட்டியலும் உலகிலேயே மிகப் பெரியதாக இருக்கலாம்.
இதையெல்லாம் களைவதற்கு இவர்கள் இத்தனை நாட்களாக உருப்படியாக எதையும் செய்யாதது மட்டுமில்லை, இப்பிரச்சனைகளை மேலும் தீவிரமாக்கும் வழியில்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இது பற்றி ஏற்கனவே நிறைய எழுதியாகிவிட்டது, இன்னும் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இப்போது விஷயம் என்னவெனில், இந்த முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் முறையே, இப்பிரச்சனைகளுக்கு எதிராக எழுந்து வரும் மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதற்குத்தானோ என்பதுதான்.
இதற்கு முன்னர் கணக்கெடுப்பு நடந்தபோது கேட்கப்பட்ட கேள்விகளுடன் இப்போது கூடுதலாக பல கேள்விகள் கேட்கப்பட உள்ளன. பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, பாலினம், கல்வி, விலாசம், திருமணமாகிவிட்டதா இல்லையா, ஆகியிருந்தால் துணையின் பெயர் போன்றவை மட்டுமின்றி புகைப்படம் கேட்கப்படும். இரு கட்டை விரல்களின் ரேகைகள் மட்டுமின்றி, எஞ்சியுள்ள எட்டு விரல்களின் ரேகைகளும் பதிவு செய்யப்படும். (பின்னாளில் மரபணு விவரத்தைப் பதிவு செய்யும் ஆலோசனையும் உள்ளது. மரபணு வங்கி அமைக்கப் போகிறார்களாம்.) இது ஒவ்வொரு தனிநபருக்கும் பிரத்யேகமான அடையாள அட்டை, அடையாள எண் போன்றவை வழங்குவதற்காக என்று கூறப்படுகின்றது. ஆகா, இது நல்லதுதானே என்று பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். அங்குதான் இருக்கின்றது விஷயமே.
ஒரு உதாரணத்திற்கு விலைவாசி உயர்வை எதிர்த்து நீங்கள் போராட்டம் நடத்துகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். போராட்டத்தில் நீங்கள் கைது செய்யப்படலாம். உங்களது அடையாள அட்டையை காவல்துறையினர் கேட்பார்கள். (அட்டை இல்லை என்றால் உங்கள் கதை அங்கேயே முடிந்தது. சிறைதான்). அட்டையைக் கொடுத்தால் அதைப் பதிவு செய்து வைத்துக் கொள்வார்கள். அடுத்தப் போராட்டத்திற்கு முன், தேவை என்றால் முன்னெச்சரிக்கை கைது செய்வார்கள். தொடர்ந்து போராட்டம் நடத்துகிறவராக இருந்தால் மொத்தமாக சிறையில் அடைக்கவோ அல்லது வேறு வழிகளில் கட்டுக்குள் வைத்திருக்கவோ இப்போது சேகரிக்கப்படும் விபரங்கள் எல்லாம் பயன்படும்.
தேசிய நுண்ணறிவுத் தொகுப்பு (National Intelligence Grid) என்கின்ற ஏற்பாட்டின் பின்னணியில் இது மேற்கொள்ளப்படுகின்றது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மக்கள் தலைவர்கள், மக்கள் தொண்டர்கள் குறித்த தனிப்பட்ட விவரங்களை இதுநாள் வரையிலும் ரகசியமாக கண்காணித்துத் திரட்டும் வேலையை உளவுத்துறை போலீசார் செய்து வருகின்றனர். இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் மூலம் பகிரங்கமாகச் செய்யப் போகின்றார்கள்.
இந்தக் கணக்கெடுப்பு 1948ம் ஆண்டு சென்சஸ் சட்டப்படி மேற்கொள்ளப்படவில்லை. வழக்கமாக அப்படித்தான் செய்யப்படும். ஆனால், 1955ம் ஆண்டு குடியுரிமைச் சட்டம், 2003ம் ஆண்டு குடியுரிமை விதிகள் (குடிமக்களைப் பதிவு செய்தல் மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்குதல்) சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றது. அதில் என்ன பிரச்சனை? ஏனெனில், சென்சஸ் சட்டத்தில் தனிமனித அந்தரங்கம் பற்றிய ஒரு விதி தெளிவாக இருக்கின்றது. குடியுரிமைச் சட்டத்தில் அந்த விதியைக் காணவில்லை என்பது மட்டுமின்றி, தகவல்களை "பிரத்யேக அடையாளம் காணும் திட்ட அமைப்பிடம்" வழங்குவது நோக்கங்களில் ஒன்றாகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இரண்டு நடைமுறைகளுக்கும் இடையிலான மிக முக்கியமான வேறுபாடு இதுவாகும். எடுத்துக் காட்டாக, நாம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முகமைக்கு அளிக்கும் தகவல்கள் "ஆய்வுக்கு உட்படுத்தக் கூடியதோ அல்லது ஒரு சாட்சியமாக (நீதிமன்றத்தில்) ஏற்றுக் கொள்ளத்தக்கதோ அல்ல என்று சென்சஸ் சட்டத்தின் 15 வது பிரிவு திட்டவட்டமாகக் கூறுகின்றது. மக்கள் தொகை பற்றிய ஒரு சித்திரத்தை அரசு பெறுவதற்குத் தேவையான தகவல்களைப் பெறுவதற்கு சென்சஸ் சட்டம் உதவுகின்றது. தனிமனித சித்திரத்தைப் பெறுவதற்காக அல்ல". (உஷா ராமநாதன், தி ஹிந்து, 5.4.10).
ஆனால், இத்தகைய சட்டங்களின்படிதான் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகின்றது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? வங்கியில் கணக்கு துவங்க வேண்டும் என்றாலும், ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்றாலும், கடவுச் சீட்டு பெற வேண்டும் என்றாலும், இன்னும் இது போன்ற பற்பல வேலைகளுக்கு சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்குச் சென்றால் அந்த புரூப் இருக்கிறதா, இந்த புரூப் இருக்கிறதா என்று கேட்கிறார்கள். இந்த ஒரு அட்டை அந்த எல்லாப் பிரச்சனையையும் தீர்த்துவிடும் என்று சிலர் வரவேற்கிறார்கள். மக்களின் பிரச்சனையை தீர்ப்பதற்காக அரசு இதைச் செய்யவில்லை. மக்களால் தனக்கு பிரச்சனை இல்லாமல் பார்த்துக் கொள்ளவே இதை, இப்படிச் செய்கின்றது.
மேலும், கணக்கெடுப்பின்போது குடும்பத்தில் உள்ள அனைவரும் பதிவு செய்யப்படுவதை குடும்பத் தலைவர் உறுதி செய்ய வேண்டும். இல்லை என்றால் அவருக்கு அபராதம் விதிக்கப்படும். கொடுக்கப்படும் விபரங்களில் பின்னாளில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் அதை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். பெண்ணுக்கு திருமணம் ஆகிச் சென்று விட்டால், மகனுக்குத் திருமணம் ஆகி மருமகள் வந்துவிட்டால், பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு வேறு வேலைக்கு யாரேனும் போனால், வெளியூருக்கு படிக்கவோ, வேலைக்கோ சென்றுவிட்டால், இப்படியான மாற்றங்கள் ஏதும் ஏற்பட்டால் தெரிவிக்க வேண்டும். குடும்பத் தலைவரை கிட்டத்தட்ட போலீஸ் இன்பார்மர் ஆக்குகின்றன 2003 ம் ஆண்டு குடியுரிமை விதிகள் என்கிறார் உஷா ராமநாதன்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் திட்டம் நிறைவேறினால் ரா, நுண்ணறிவுப் பிரிவு, அமலாக்கப் பிரிவு, தேசிய புலனாய்வுத் துறை, மத்தியப் புலனாய்வுத் துறை, போதை மருந்துத் தடுப்புப் பிரிவு உள்ளிட்ட 11 பாதுகாப்பு மற்றும் புலனாய்வு நிறுவனங்களுக்குத் தேவைப்பட்டால் ஏற்கனவே திரட்டப்பட்டுள்ள 23 வகையான தரவுகளை சம்பந்தப்பட்ட துறையினர் அளிக்க வேண்டியிருக்கும். அல்லது அந்நிறுவனங்களே எடுத்துக் கொள்ள முடியும். ரயில் மற்றும் விமானப் பயண விவரங்கள், வருமானவரி விவரங்கள், தொலைபேசி அழைப்புகள், வங்கிக் கணக்கு விவரங்கள், கடன் அட்டை பரிவர்த்தனைகள், விசா மற்றும் குடியேற்ற ஆவணங்கள், சொத்து ஆவணங்கள், ஓட்டுநர் உரிம ஆவணங்கள் ஆகியவை அவற்றில் அடங்கும். அதாவது, கிட்டத்தட்ட தனிமனித அந்தரங்கம் என்பதே இருக்காது. தனிமனித சுதந்திரம் என்பதும் அதனால் இருக்கவே இருக்காது. தனிமனித சுதந்திரம் பற்றி வாய்கிழியப் பேசும் முதலாளித்துவ அரசுதான் இந்த வேலையைச் செய்கின்றது. எந்த ஜனநாயகத்தின் பெயரால் முதலாளிகள் ஆண்டுகொண்டிருக்கிறார்களோ அந்த ஜனநாயகத்தையே குழி தோண்டிப் புதைக்கிறார்கள்.
"தன்னுடைய ரகசியப் புலனாய்வு சாதனம் சதித்திட்டத்திற்கான வாகனமாகவோ அல்லது பாரம்பரியமான ஜனநாயக சுயாட்சி உரிமைகளை நசுக்கும் கருவியாகவோ ஆகாமல் இருப்பதை எப்படி ஒரு ஜனநாயகம் உறுதி செய்யப் போகின்றது?" என்ற கேள்வியை எழுப்பி அதற்குப் பதிலும் கூறியிருக்கிறார் குடியரசுத் துணைத்தலைவர் ஹமீத் அன்சாரி. புலனாய்வு அமைப்புகள் பாராளுமன்றத்திற்குப் பதில் சொல்ல வேண்டியவையாகவும், பாராளுமன்றத்தின் கண்காணிப்பிற்கு உட்பட்டவையாகவும் இருக்க வேண்டும் என்பது அவரது ஆலோசனை. ஆனால் இதற்கு அந்த அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. அரசாங்கமும் அந்த எதிர்ப்பை ஏற்றுக் கொள்கின்றது. முதலாளித்துவ எதிர்க்கட்சிகளும் இதைக் கண்டு கொள்ளவில்லை.
மக்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாத, ஆனால் மக்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரமுள்ள அமைப்புகள் இருப்பது, அந்த அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றது. இன்று ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் நாளை எதிர்க்கட்சியாக ஆகலாம். புதிதாக ஆட்சிக்கு வருகின்றவர்கள் ஏற்கனவே திரட்டி வைக்கப்பட்டிருக்கும் இந்தத் தரவுகளை எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கப் பயன்படுத்தக் கூடும் என்று இது தொடர்பாக பிரதமர் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த தீர்மானமும் இன்றி அந்தக் கூட்டம் முடிந்திருக்கின்றது. கலந்தாலோசனைகள் தொடரும் என்று அறிவித்திருக்கின்றார்கள். கட்சிகள் ஒன்றையொன்று பழிவாக இதைப் பயன்படுத்தும் என்கின்ற ஆபத்தை விட, ஆட்சிகள் எதிர்ப்புக் குரலெழுப்பும் மக்களை அடக்கி ஒடுக்கவே இதை அதிகம் பயன்படுத்தும் என்பதில் சந்தேகம் தேவையில்லை.
மேலும், இப்படி அதிகாரங்களை மேலும் மேலும் தேர்ந்தெடுக்கப்படாத அமைப்புகளிடம் அளிக்கும் போக்கு உலகமய அரசியலின் முக்கியமான பண்பாகும்.
"....இவை கட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயகங்கள். அவற்றில் கட்டுப்படுத்துபவர்கள் எந்த ஜனநாயக அமைப்பு முறைக்கும் கட்டுப்பட்டவர்கள் அல்ல".
"பிறரின் மேற்பார்வையில் நடப்பவை, வரம்பிற்கு உட்பட்டவை, கட்டுப்படுத்தப்பட்டவை அல்லது குறைவான தீவிரம் கொண்டவை என்று இந்த ஜனநாயக ஆட்சிகள் பல்வேறு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றன. இவற்றில் அதிகாரம் நிலையான, தேந்தெடுக்கப்படாத அமைப்புகளிடம் குவிக்கப்படுகின்றது. இவை தேர்தல்களினால் ஏற்படும் மாற்றங்களினால் பாதிக்கப்படுவதில்லை" (மார்த்தா ஹர்னேக்கர், வெளிவரவிருக்கும் "புதிய பாதையில் இடதுசாரிகள்" என்ற நூலில் இருந்து).
ஏழைகள்- பரம்பரை ஏழைகள் (இனியும் பொறுக்க முடியாதவர்கள்), உலகமயம் உண்டாக்கிய ஏழைகள் (இவர்கள் சமீபத்தில் ஏழைகளாக்கப்பட்டவர்கள் என்பதால், கலாச்சாரம் "செல்வம்" வழங்கியபோதும் பொருளாதாரம் "ஏழ்மையை" வழங்கியதால் அதை எதிர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டவர்கள்) விஷயத்தில் இந்தச் சட்டங்கள், விதிமுறைகள் என்ன செய்யும்?
பெரும்பாலும் வாழ்வின் விளிம்பிலும், சட்டப்படியான நிலையின் விளிம்பிலும் வாழும் ஏழைகளுக்கு இது குற்றமிழைக்கும் குணம் உள்ளுறையாகப் பொதிந்துள்ளவர்கள் என்கின்ற அடையாளத்தை அளிக்கும். வெளிப்படையான வறுமையை அபாயத்தின் குறியீடாகக் கருதும் நீதிஅமைப்பு நிலவும் நாட்டில் இதுதான் நடக்கும். (இது ஒன்றும் மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல. பிச்சைக்காரர்கள் குறித்த சட்டங்களைப் படித்துப் பாருங்கள். ஒரு நில ஆக்கிரமிப்பாளருக்கு மறுகுடியமர்த்துதல் என்கின்ற பெயரில் நிலம் வழங்குவது என்பது பிக்பாக்கெட்காரனுக்கு சன்மானம் வழங்குவது போலத்தான் என்று சில நீதிமன்றங்களின் தீர்ப்பில் இந்த அணுகுமுறை பிரதிபலிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பாளர் என்கின்ற சொல்லை வேறு வழியின்றி பயன்படுத்துகின்றோம். நீதிமன்றம் சேரி வாழ் மக்களை மனதில் வைத்துத்தான் அப்படிக் கூறியுள்ளது என்பது தெளிவு. வர்க்க ஏற்றதாழ்வுகளை, அதாவது இவ்விடத்தில் பொருளாதார ஏற்றதாழ்வுகளை கணக்கில் கொள்ளாமல்தான் நீதிமன்றங்கள் அப்படிக் கூறியுள்ளன. வீடற்ற ஏழைகள் கிடைக்கும் இடத்தில் குடிசை போடுவதும், ரியல் எஸ்டேட் முதலைகள் அரசு புறம்போக்கு நிலங்களையும், மற்றவர்க்கு உரிய இடத்தை அடித்துப் பிடுங்குவதும் ஒன்றா என்ன?).
பணக்காரர்கள் எப்போதும் ஏழைகளைக் கண்டு பயப்படத்தான் செய்வார்கள். குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கத்தானே செய்யும்.
"பிறநாடுகளுடனான ஒப்புநோக்கில் அரசு இறையாண்மை உள்ளது. ஆனால், ஒரு நாட்டிற்குள் அரசைவிட மக்களே இறையாண்மை உள்ளவர்கள்" (உஷா ராமநாதன் கட்டுரை).
மக்களின் இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கும் பிரத்யேக அடையாள எண் திட்டம் தேவையா என்ன?
நன்றி: கீற்று







அழியப் போகும் மொழிகளின் பட்டியலில் தமிழ்?!


Tamil tops the series of languages digged-in? - Tamil Literature 
Ilakkiyam Papers  
                                                                                                                           சமீபத்தில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் "மரியா ஸ்மித் ஜோனெஸ்" என்ற பெண்மணி இறந்து விட்டார். ஒன்பது பிள்ளைகளுக்கு தாயான இவர் இறக்கும் போது இவருடைய வயது 89. இவருடைய இறப்பு பலருக்கு துயரத்தை கொடுத்துள்ளது. அவருடைய இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். பழங்குடி இனத்தை சேர்ந்த மரியா ஸ்மித் அலாஸ்காவில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைக்காக பல போராட்டங்களை மேற்கொண்டவர்.  

ஆனால் அவருடைய இறப்பு யாராலும் ஈடு செய்ய முடியாததாக பார்க்கப்படுவதற்கு காரணம் அது இல்லை. உண்மையான காரணம், மரியா ஸ்மித் போகும் போது ஒரு மொழியையும் தன்னுடனே சேர்த்துக் கொண்டு போய் விட்டார். ஆம், அலாஸ்காவின் பழங்குடி மக்களின் மொழிகளில் ஒன்றான "ஏயக்" என்கின்ற மொழியை பேசத் தெரிந்த உலகின் கடைசி மனிதராக அவர் மட்டும்தான் இருந்தார். அவர் இறந்ததன் பிறகு இன்றைக்கு உலகில் யாருக்குமே அந்த மொழியை பேசத் தெரியாது.
அவர் இறந்த தினத்தோடு உலகில் உள்ள பல மொழிகளில் ஒரு மொழி அழிந்து விட்டது. மரியா ஸ்மித்திற்கு ஒன்பது பிள்ளைகள் இருந்தும், யாருமே "ஏயக்" மொழியை கற்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. எல்லோரைப் போன்று அவர்களும் ஆங்கிலம் கற்பதும், பேசுவதும்தான் நாகரீகமானதும், தேவையானதும் என்ற கருத்தோடு இருந்து விட்டார்கள். "ஏயக்" மொழியைப் பேசும் கடைசி மனிதராக தான்தான் இருக்கப் போகின்றேன் என்ற விடயம் மரியா ஸ்மித்திற்கு அன்றைக்கு தெரிந்திருந்ததா என்பதும் தெரியவில்லை.
"ஏயக்" மொழி பேசத் தெரிந்த மரியா ஸ்மித்தின் ஒரு சகோதரி 1993இலேயே இறந்து விட்டார். அதன் பிறகு மரியா ஸ்மித்தோடு "ஏயக்" மொழியில் உரையாடுவதற்கு யாருமே இருக்கவில்லை. "ஏயக்" மொழி அழிந்து விடக் கூடாது என்பதற்கு மரியா ஸ்மித் சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஒரு மொழியியல் வல்லுனரின் உதவியோடு "ஏயக்" மொழிக்கான அகராதியையும், இலக்கண நூலையும் தயாரித்தார். இனிமேல் யாராவது இந்த நூல்களின் உதவியோடு ஏயக் மொழியை கற்றுப் பேசினால் மட்டும்தான், அந்த மொழி மீண்டும் உயிர் பெறும்.
ஏயக் மொழிக்கு மட்டும்தான் இந்த நிலைமை என்று இல்லை. உலகின் பெரும்பாலான மொழிகளின் நிலைமை இதுதான். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு மொழி அழிவதாக மொழியியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள். மரியா ஸ்மித் வாழ்ந்த அலாஸ்காவில் பேசப்படுகின்ற மொழிகளில் மேலும் 20 மொழிகள் விரைவில் அழிந்து விடும் நிலையில் இருக்கின்றன. உலகம் எங்கும் மொழிகள் அழிந்து வரும் வேகம் அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை. ஒரு மொழி அழிகின்ற பொழுது ஒரு இனத்தின் பண்பாடு அழிகிறது. இன்னும் சொல்வது என்றால் ஒரு இனமே அழிகிறது. அழிகின்ற மொழிகளில் பெரும்பாலானவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழமையான மொழிகள். அந்த மொழிகளுக்குள் மனித குலத்தின் வரலாற்றின் பெரும் பகுதி புதைந்து கிடக்கின்றது. மொழிகளோடு மனித குலத்தின் வரலாற்று உண்மைகளும் அழிந்து போகின்றன. இன்றைக்கு உலகிலே வாழுகின்ற அறுநூறு கோடி மக்களும் மொத்தம் ஆறாயிரம் மொழிகளைப் பேசுகின்றார்கள். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆறாயிரம் மொழிகளிலே அறுநூறு மொழிகள் மட்டுமே மிஞ்சியிருக்கும். மிச்சம் ஐந்தாயிரத்து ஐந்நூறு மொழிகளும் அழிந்து விடும். இது மொழியியல் வல்லுனர்களின் தீவிரமான ஒரு எச்சரிக்கை. இன்றைக்கு பேசப்படுகின்ற ஆறாயிரம் மொழிகளில் மூவாயிரம் மொழிகளை ஆயிரத்திற்கும் குறைவானவர்களே பேசுகின்றார்கள். ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு மொழிகளை நூறு பேர் வரையிலானவர்களே பேசுகிறார்கள். ஐந்நூறு மொழிகளை வெறும் பத்துப் பேர்தான் பேசுகிறார்கள்.
ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு ஆகக் குறைந்தது ஒரு இலட்சம் பேராவது அந்த மொழியை பேச வேண்டும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கருத்து. அந்த வகையில் தமிழ் மொழி தற்போதைக்கு அழியாது என்று நம்பலாம். உலகில் மிக அதிகமானவர்களால் பேசப்படுகின்ற இருபது மொழிகளின் பட்டியலில் தமிழும் இருக்கின்றது. கல்வெட்டில் இருந்து கணினி வரை தமிழ் மொழி பரந்து நிற்கின்றது. ஆனால் ஒரு மொழி அழிவதற்கு தேவையான அனைத்துக் காரணங்களையும் தமிழ் மொழியும் கொண்டுதான் இருக்கின்றது என்பது இதிலே ஒரு அபாயகரமான செய்தி. ஒரு மொழி அழிவதற்கான முக்கிய காரணங்களாக சில விடயங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. மொழிக்குள் மற்றைய மொழிகளின் ஊடுருவலும் ஆதிக்கமும், வட்டாரப் பேச்சு வழக்குகள் தனி மொழிகளாக கிளர்வது, இளந்தலைமுறை மொழியை கற்கவும் பேசவும் ஆர்வம் அற்று இருப்பது போன்றவை ஒரு மொழி அழிவதற்கு முக்கிய காரணங்கள். வேற்று மொழிகளின் ஊடுருவல் தமிழுக்குள் மித மிஞ்சிப் போய் கிடக்கின்றது
எத்தனையோ சொற்களை, அவைகள் தமிழ் சொற்களா இல்லையா என்பதை அறிவதே மிகக் கடினமாக இருக்கின்றது. அதே போன்று பல துறைகளில் ஆங்கிலம் போன்ற மொழிகளின் ஆதிக்கம் இருக்கின்றது. வட்டாரப் பேச்சு வழக்கு மொழிகளாக இருந்தவை தனி மொழிகளாக பிரிந்து போனதையும் தமிழ் மொழி சந்தித்திருக்கின்றது. இன்றைக்கு தமிழ் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான வட்டார மொழிகள் நாளை தனி மொழிகளாக மாறி விடாது என்று உறுதியாக நம்புவதற்கு போதுமான காரணங்கள் இல்லை. "பொதுவான தமிழ்" இன்றைக்கு எழுத்தில் மட்டும்தான் இருக்கின்றது. ஆனால் "வட்டார மொழி இலக்கியங்கள்" என்ற பெயரில் வருகின்ற அதிகரித்த படைப்புக்கள் இதற்கும் முடிவு கட்டி விடுமோ என்ற அச்சத்தைக் கொடுக்கின்றது. தமிழ் நாட்டின் சென்னை போன்ற பெரு நகரங்களிலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் இளந்தலைமுறை தமிழை எவ்வளவு தூரம் பேசுவதற்கும், கற்பதற்கும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
இன்றைக்கும் தமிழ் மொழி உயிரோடு இருப்பதன் ஒரே ஒரு காரணம், தமிழை பேசுபவர்கள் ஆறு கோடிக்கும் மேற்பட்டவர்களாக இருப்பதுதான். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் முப்பது ஆண்டுகளில் அழியப் போகின்ற மொழிகளில் ஒன்றாக தமிழும் இருப்பதாக செய்தி ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் முப்பது ஆண்டுகளில் எல்லாம் தமிழ் அழிந்து விடாது. முப்பது ஆண்டுகள் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. அதே வேளை நீண்ட காலத்திற்கு நாம் இப்படி இறுமாப்போடு இருக்க முடியாது. பேசுபவர்களின் எண்ணிக்கையில் மட்டும் ஒரு மொழியின் இருப்பு தங்கியிருக்க முடியாது. எண்ணிக்கையும் மாறுபடக் கூடிய ஒன்றுதான். மொழி அழிவதற்கு தேவையான மற்றைய காரணிகளும் தமிழில் இருக்கின்றன. ஆகவே தமிழ் மொழி நீடித்து நிலைக்க வேண்டும் என்ற சிந்தனை ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் இருந்தால் மட்டும்தான், தமிழ் மொழி நீண்ட காலத்திற்கும் நிலைக்கும். இல்லையென்றால் "அழிந்து போன மொழிகளின் பட்டியலில்" தமிழ் இடம் பெறுவது தவிர்க்க முடியாததாகி விடும். மரியா ஸ்மித் ஜோனஸின் உடலோடு "ஏயக்" மொழியும் புதைக்கப்பட்டுவிட்ட இந்த நாளில் தமிழர்களைப் பார்த்து சொல்லக் கூடிய செய்தி இதுதான்.
தமிழரோடு தமிழில் பேசுவோம்...
தமிழன் என்று சொல்வோம்....
தலை நிமிர்ந்து நிற்போம்.....
"தமிழன் இல்லாத நாடில்லை
தமிழனுக்கென்று ஒரு நாடில்லை..."

தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு!

இயற்கை இன்னல்கள் பலவற்றையும் தாங்கிக் கொண்டு ஆண்டு முழுவதும் வயல்களில் உழைக்கும் உழவனின் பெருமையையும், விவசாயத்தின் மகத்துவத்தையும் உலகிற்கு பறை சாற்றும் மகத்தான திருநாள் தை பொங்கல் தினம் ஒன்றுதான் என்றால் அது மிகையாகாது.
ஒவ்வொரு விவசாயக் குடிமகனும் தங்கள் நிலங்களில் விளைந்த நெல், மஞ்சள், கரும்பு போன்றவற்றுடன் சர்க்கரை பொங்கல் படையல் வைத்து, மாவிலை தோரணம் கட்டி இயற்கையையும், சூரியனையும் வழிபடும் தமிழர் திருநாள் தை பொங்கல். தை பொங்கல் விழா தமிழர்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் அதே வேளையில், தமிழரின் வீரத்தை உலகிற்கே வெளிச்சம் போட்டுக் காட்டும் முரட்டுக் காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போன்ற வீர விளையாட்டுகள் தை மாதம் முழுவதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும். ஆனால் சிந்து சமவெளி நாகரீகத்திலேயே ஜல்லிக்கட்டு புழக்கத்தில் இருந்துள்ளது. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்முத்திரையில் இதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.
காளைகளை அடக்கும் திருவிழா ஸ்பெயின், போர்ச்சுக்கல் போன்ற அயல்நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. அது கூர்மையான வாளைக் கொண்டு காளையை காயப்படுத்தி அடக்கும் விளையாட்டுகளாகும். ஆனால் தமிழகத்தில் கொம்புகள் கூர்சீவி விடப்பட்ட முரட்டுக் காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு தனித்தன்மை வாய்ந்தது மட்டுமல்ல, தமிழரின் வீரத்திற்கும், வீரத்துடன் ஒன்றிணைந்த பண்பாட்டிற்கும் சான்றாகத் திகழ்கிறது.
4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிந்து சமவெளி நாகரீக காலத்திலேயே ஜல்லிக்கட்டு புழக்கத்தில் இருந்துள்ளது. சிந்து சமவெளி நாகரீக காலத்தில் புழக்கத்தில் இருந்த பொருட்கள், தற்போதைய பாகிஸ்தானில் உள்ள மொகஞ்சதாரோவில் கடந்த 1930-களில் கண்டெடுக்கப்பட்டன. அப்பொருட்கள் டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன. அந்த பொருட்களில் கல்லால் ஆன ஒரு முத்திரையும் அடங்கும். அந்த முத்திரையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை சித்தரிக்கும் ஒரு சிற்பம் செதுக்கப்பட்டு உள்ளது. ஒரு காளை மாடு தன்னை அடக்க முயலும் வாலிபர்களை முட்டி தூக்கி வீசுவது போலவும், வாலிபர்கள் அந்தரத்தில் பறப்பது போலவும் அந்த முத்திரை செதுக்கப்பட்டு உள்ளது. இந்த முத்திரை 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கி.மு. 2000ஆம் ஆண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. இதன் மூலம் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஜல்லிக்கட்டு புழக்கத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது. இதை பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர். ஆனால் இந்த முத்திரையில் எழுத்துகள் எதுவும் இடம்பெறவில்லை. இந்த முத்திரை அஸ்கோ பர்போலா என்பவர் எழுதிய ஒரு புத்தகத்தில் வண்ண புகைப்படமாக இடம் பெற்றுள்ளது.
மேலும் தமிழ் எழுத்தாளரும், சிந்து சமவெளி காலத்திய எழுத்துகளில் வல்லுனருமான ஐராவதம் மகாதேவனும் இதுபற்றி ஒரு புத்தகம் எழுதி உள்ளார். அதை கடந்த 1977ஆம் ஆண்டு இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியிட்டது. இந்த முத்திரை கி.மு. 2000-ம் ஆண்டை சேர்ந்தது. இதை பாதுகாப்பாக வைத்துள்ளனர். சிந்து சமவெளி நாகரீக காலத்தில் நடைமுறையில் இருந்த ஜல்லிக்கட்டை இந்த முத்திரை பிரதிபலிப்பதாக பல ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இதில் உள்ள படத்தை வைத்து இருவிதமான கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. ஒருசாரார் ஒரு காளை ஒன்றுக்கு மேற்பட்ட ஜல்லிக்கட்டு வீரர்களை தூக்கி வீசுவதாக கூறுகிறார்கள். 2 வீரர்கள் அந்தரத்தில் பறப்பது போலவும், ஒரு வீரர் காளையை பிடிக்க முயல்வது போலவும், மற்றொருவர் பல்டி அடிப்பது போலவும், 5-வது நபர் தரையில் விழுந்து கிடப்பது போலவும் இந்த சித்திரம் அமைந்திருப்பதாக கூறுகிறார்கள்.
தமிழர் இலக்கியத்தில் "கொல்லேறு தழுவல்" என்று பெயர் கூறி காளை அடக்குவது வெகுவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆளை கொன்று தூக்கி எறியும் வகையில் வளர்க்கப்பட்ட காளையை, வீரம் சொரிந்த காளையர்கள் அடக்குவதை தழுவல் என்று வீரத்தையே மென்மையான வார்த்தையைக் கொண்டு தமிழ் இலக்கியம் சித்தரிக்கிறது.
இன்றளவும் இப்படிப்பட்ட முறையில்தான் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கொல்லேறு தழுவல் நிகழ்த்தப்படுகிறது. ஜல்லிக்கட்டில் இறக்கப்படும் காளைகளை அதற்கென்றே வளர்க்கின்றனர். ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் காளையர்க்களுக்கும், அவர்களை தூக்கியெறிய முற்படும் காளைக்கும் இடையிலான சம வாய்ப்புடைய வீர சோதனைதான்.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டில் ஒரு முறை இறங்கிய காளையர் எவரும் அடுத்த ஆண்டும் இறங்கி தங்கள் திறனை தொடர்ந்து நிரூபிக்காமல் இருப்பதில்லை. உடல் பலம் உள்ளவரை ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டு, தங்கள் உயிரை பணயமாக வைத்து தமிழரின் வீர மரபை தொடர்ந்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு நடக்கும் பல ஊர்களில் ஒரு காலத்தில் தீவிரமாக காளை அடக்குவதில் போட்டி போட்டவர்கள், இன்று வயது முதிர்ந்த நிலையிலும் கூட, ஜல்லிக்கட்டு நடக்கும் நாளில் பட்டிக்குச் சென்று, சீரிக் கொண்டு பாய்ந்துவரும் காளை ஒன்றை தொட்டுவிட்டு வீடு திரும்பும் வழக்கம் இன்றும் உள்ளது.

Friday, February 11, 2011

திரியும் உண்மைகள்

'ம‌ஞ்சு, பூர்ணிமாவ‌ நான் ல‌வ் ப‌ண்றேன்'.
'நினைச்சேன், பணம் வாங்காம‌‌ ரிப்பேர் ப‌ண்ற‌ப்போவே நினைச்சேன்'. மெலிதாக‌ வெட்க‌ப் புன்ன‌கை பூத்த‌ கதிர் தொட‌ர்ந்தான்.
'ஆனா என‌க்கு கொஞ்சம் சந்தேகமா இருக்கு'.
'அட‌ப்பாவி, ல‌வ் ப‌ண்ண ஆர‌ம்பிச்ச‌துமே ச‌ந்தேக‌மா உன‌க்கு'.
'இல்ல‌, அவ‌ ஸ்கூட்டி ரிப்பேர் ஆற‌தும், என்கிட்ட‌யே எடுத்துட்டு வ‌ர‌தும், ரிப்பேர் ப‌ண்ற‌ வ‌ரைக்கும் என் கிட்ட‌யே பேசுற‌தும், வீட்ல‌ ச‌மைச்ச‌த‌
என்கிட்ட‌ குடுக்குற‌தும், நாளு, கிழமைன்னா வீட்டுக்குக் கூப்பிடுறதும் எல்லாமே, நான் ஆச‌ப்ப‌ட்ற‌ மாதிரியே ந‌ட‌க்குது'.
'ச‌ரி, அதுல‌ என்ன‌ ச‌ந்தேக‌ம் உன‌க்கு?'.
'எல்லாமே ந‌ம‌க்கு சாத‌க‌மா அமைஞ்சிட்டா அப்புற‌ம் க‌ட‌வுள்னு ஒண்ணு எதுக்கு?'.
'கேள்வி ந‌ல்லாதான் இருக்கு'.
'அப்போ ப‌தில் என்ன‌?'.
'அத‌ அந்த‌ பொண்ணுகிட்ட‌யே கேளேன்'.
'கேக்க‌லாம். ஆனா இப்போ கேட்டா ச‌ரியா இருக்குமா தெரிய‌ல‌. நீ அவளுக்கு பக்கத்து வீடு தானே. அங்க‌ என்ன‌ ந‌ட‌க்குதுனு உன‌க்கு
தெரிஞ்சிருக்குமே'.
'அந்த‌ பொண்ணு நேர‌த்துக்கு எழுந்திரிக்கிது. குளிக்கிது. ட்ர‌ஸ் ப‌ண்ணுது. காலேஜ் போகுது. வ‌ருது. ச‌னி ஞாயிறுல‌ நாவ‌ல் ப‌டிக்கிது அக்கம்பக்கம்
உறவுக்காரங்க வீட்டுக்கு போகுது. வ‌ருது. அப்புற‌ம் தூங்குது. ஆனா இதெல்லாம் வ‌ச்சி அந்த‌ பொண்ணுக்கு வேற‌ ல‌வ் இல்ல‌னு சொல்ல‌ முடியுமா
தெரிய‌ல‌'.
'நீ அவளுக்கு ஃப்ரண்ட் தானே?'.
'ஆமா, நாலஞ்சு வருஷமா நாங்க ஃப்ரண்ட்ஸ் தான். ஏன் கேக்குற‌'.
'இல்ல, இப்படி பதில் சொல்ற. அவ வேற யாரையாச்சும் லவ் பண்றாளா என்ன?'.
'அப்படி அவ என்கிட்ட இதுவரை சொன்னதே இல்ல'.
'அப்போ அவ யாரையும் லவ் பண்ணலனு தானே அர்த்தம்'.
'இருக்கலாம்'.
'என்ன மஞ்சு, இப்படி பேசுற?'.
'எப்படி பேசுறேன்?'.
'இல்ல, உன் ஃப்ரண்ட் பத்தி நீயே தப்பா பேசுற மாதிரி இருக்கு'.
'எது தப்பு?'.
'இப்ப நீ சொன்னதுதான். அவ லவ் பண்றாளானு கேட்டதுக்கு இருக்கலாம்னு சொன்னியே'.


'ஆமாம்னு சொல்லலையே. அது எப்படி தப்பாகும்?'.
'சரி, தப்பு இல்ல. ஆனா, சரியும் இல்ல தானே?'.
'அது சரியும் இல்ல. தப்பும் இல்ல. அது ஒரு உண்மை'.
'என்ன உண்மை?'.
'இருக்கலாம்ங்கறது'.
'.........'.
'மனிதர்களின் பார்வையில் காட்சிகள் விரிகையில் உண்மை திரிகிறது. உண்மை என்கிட்ட வந்துச்சா தெரியல. ஆனா என்கிட்ட வந்தது என்னைக்
கடந்து உன்கிட்ட வர்றப்போ, என்கிட்ட எப்படி வந்துச்சோ, அப்படியே உன்கிட்ட வரட்டும்னு தான் அப்படிச் சொன்னேன். மீதிய நீயே புரிஞ்சிக்கோ'.
'ம்ம்ம்ம்'.
'ரொம்ப கொழப்பிட்டேனா?'.
'இல்ல. ஆனா, இந்த பதில மேலோட்டமா எடுத்துக்கிட்டா ஆபத்தா முடிய வாய்ப்பிருக்கு'.
'நீ மேலோட்டமா எடுத்துக்குற ஆளு இல்லனு எனக்குத் தெரியும். அதான் இப்படிச் சொன்னேன். இல்லனா வேற மாதிரி பதில் சொல்லியிருப்பேன்'.
லேசாக சிரித்தவாறே அவள் சொன்னதை அவனின் வெறுமை மெளனமாக உள்வாங்கிக் கொண்டிருந்தது.
'சரி கதிர், நான் வரேன். நீ யோசிச்சு முடிவு பண்ணு' என்றபடியே திரும்பி, அவளின் வீடு நோக்கி நடக்கத்தொடங்கியிருந்தாள் மஞ்சு. மஞ்சு
அப்படித்தான். அவளுக்கு எதிலும் ஒரு ஆழ்ந்த புரிதல் இருந்தது. அறிவில் முதிர்ச்சி இருந்தது. அவளிடம் இம்மாதிரியான பதில்களை சர்வ
நிச்சயமாய் எதிர்பார்க்கலாம். அவள் வரைக்கும் பிரச்சனையின்றி பொத்தாம் பொதுவாய், யாருக்கும் பாதகமின்றி, தன்னையே பொருப்பாளி
ஆக்கிவிட்டு தந்திரமாய் கழன்றுகொண்டுவிட்டாள். இவளை என்னவென்று சொல்வது. தேர்ந்த சிந்தனைக்காரி என்றா? குழப்பவாதி என்றா? அல்லது
கழுவுகிற மீனில் நழுவும் மீன் என்றா? கதிரின் அன்றைய இரவு மிகவும் நீண்டதாகக் கழிந்தது.
மஞ்சு பூர்ணிமா வீட்டிற்கு பக்கத்து வீடு. பூர்ணிமா வயதுக்காரி தான். இன்னும் திருமணமாகவில்லை. கதிருக்கு தோஸ்து. பூர்ணிமாவை காதலிக்கிறான்
கதிர். ஆனால் அவள் பொறியியல் கல்லூரியில் படிப்பவள். கதிரோ, பி.ஏ. படித்துவிட்டு சைக்கிள் கடையில் செட்டிலானவன். தியாகு என்றொரு
பையன் கதிருடன் வேலை செய்கிறான்.
கடந்த நான்கு வருடங்களாக பூர்ணிமாவின் மேல் காதல் கதிருக்கு. பூர்ணிமாவின் ஸ்கூட்டி எப்போது ரிப்பேர் ஆனாலும் அவள் இவன் கடைக்குத் தான் வருவாள். அவளுக்காகவே ஸ்கூட்டி ரிப்பேர் மட்டும் அதிகப்படியாக தெரிந்து கொண்டான். அவளுக்கு மட்டும் ஃப்ரீ சர்வீஸ். அவளே முன்வந்து
பணம் கொடுத்தாலும் வாங்க மாட்டான். ஸ்கூட்டி ரிப்பேர் ஆகும்வரை அவள் இவனிடம் தான் பேசிக்கொண்டிருப்பாள். அப்போதெல்லாம் அவள்
வேண்டுமென்றெ ஸ்கூட்டியை ரிப்பேராக்கி இவனிடம் பேசுவதாக நினைத்துக்கொள்வான். என்றாவ‌து இப்ப‌டி பேசும்போது த‌ன் காத‌லைச் சொல்லிவிட‌  வேண்டும் என்று நினைத்துக்கொள்வான். ஆனால் அந்த‌ என்றாவ‌து இன்று வ‌ரை ந‌ட‌ந்திருக்க‌வில்லை.
இது நடந்து ஒரு மாதம் கடந்து விட்ட நிலையில், ஒரு நாள். 'ண்ணா, ண்ணா' மூச்சிறைக்க ஓடிவந்த தியாகு, கதிரின் சைக்கிள் கடை வாசலில், கொளுத்தும் வெயிலை வடிகட்டிக்கொண்டிருந்த சாக்குத் துணியை
தாங்கியபடி, நிலத்தில் ஊன்றி நிறுத்தப்பட்டிருந்த‌ மரக்கட்டையில் ஒரு கைவைத்து முட்டுக்கொடுத்து சாய்ந்தபடி மூச்சுவாங்க நின்றான்.
கழுவிக்கொண்டிருந்த பஞ்சர் ஒட்டிய சைக்கிள் ட்யூபை ஒரு கையால் பிடித்தபடி தியாகுவைப் பார்த்த கதிர் எந்த வித உணர்வையும்
வெளிக்காட்டாதவனாய் 'என்னடா?' என்றபடியே ட்யூபைக் கழுவுவதைத் தொடர்ந்து கொண்டிருந்தான்.
'ண்ணா, பூர்ணி அக்காக்கு கண்ணாலமாண்ணா, கட்டிகினு எங்கியோ போதாம் அது' தியாகு அவசரமாய் சொல்லி நிறுத்த, கதிர் இப்போது ட்யூப்
கழுவுவதை முழுவதும் நிறுத்திவிட்டிருந்தான்.
'என்னடா சொல்ற?' கையிலிருந்த ட்யூபை கீழே போட்டுவிட்டு பதட்டத்துடன் எழுந்தவனின் வார்த்தைகளில் அதிர்ச்சி கலந்திருந்தது. புருவங்கள்  சுருங்கியிருந்தன‌.
'ஆமாண்ணா, அது காலேஜ்ல படிச்ச பையனாம்ணா, லவ்வாம், இன்னாஇன்னாவோ பேசிக்கிறாங்கணா, மேட்டர கேட்டதும் இங்கதாண்ணா வரேன்'.
'யாரு சொன்னா?'
'மஞ்சக்கா தாண்ணா சொல்லிச்சி. உன்னான்ட சொல்ல சொல்லி சொல்லிச்சிணா'.
கதிர் பதில் பேசவில்லை. அதற்கு பிறகும் தியாகு ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தான் ஆனால், கதிர் எதையும் கவனிக்கவில்லை. அவன் கவனம்,
அவன் எதை நடந்துவிடக்கூடாது என்று எண்ணியிருந்தானோ அது நடந்தேவிட்டதில் இருந்தது. உள்ளுக்குள் எதோ ஒரு உணர்வு அவனின்
எதிர்பார்ப்புகள் பொய்க்கபோகிறது என்று சொல்லிக்கொண்டே இருந்தது.
பூர்ணிமா, இத்தனை நாட்களில், வேறொரு ஆடவனிடம் காதல் வயப்பட்டவள் என்று தோன்றியிருக்கவில்லை. மஞ்சு சரியாகத்தான்
சொல்லியிருக்கிறாள். மனிதர்கள் பார்வையில் காட்சிகள் விரிகையில் உண்மை திரிகிறது. அன்றொரு நாள் மஞ்சுவுடன் பேசுகையில், பூர்ணிமாவுடன்
நான்கைந்து வருட நட்பு என்று சொல்லியிருக்கிறாள். நான்கைந்து வருடம் பழகிய தோழியிடம் கூட பூர்ணிமா உண்மையை சொல்லியிருக்கவில்லை.
அவளின் 'இருக்கலாம்' என்கிற பதில் எத்தனை அர்த்தமுள்ளது என்று இப்போது தோன்றுகிறது. எத்தனை உண்மை அதில் மறைந்திருக்கிறது.
இதைத்தான் நீயே புரிந்துகொள் என்று சொன்னாளா?


உண்மையில், மஞ்சுவுடனான உரையாடலுக்குப்பின், ஒரு வகையில் இச்செய்தியை அவன் முன்பே எதிர்பார்த்திருந்தான். அதனால்தானோ என்னமோ
ஏமாற்றமோ, துக்கமோ பெரிய அளவில் இல்லாமல் போனது. இல்லையெனில், இந்நேரம் அவன் தூக்கிலோ, அல்லது விஷமருந்தியோ தற்கொலைக்கு  முயன்றிருக்கலாம்.
மஞ்சுவுக்கும் பூர்ணிமாவின் காதல் தெரியாமல் இருந்திருக்க‌லாம். ஆனால், அதற்காக 'பூர்ணிமா யாரையும் காதலிக்கவில்லை' என்று அன்றே அவள்
சான்றிதழ் அளித்திருந்தால் இந்நேரம் என்னவாகியிருக்கும்? ஏமாற்றம் என் உயிரைக் குடித்திருக்கும். அப்படிச்சொல்லாமல், 'இருக்கலாம்' என்று
சொல்லி, ஒரு உண்மையை சொல்லாமல் உணர்த்தியிருக்கிறாள். ஒரு எச்சரிக்கை உணர்வைத் தோற்றுவித்திருக்கிறாள். இன்றைய ஏமாற்றத்தை அன்றே  கொன்றிருக்கிறாள். வார்த்தைகளில் எத்தனை சாதுர்யம்.


தன் நான்கு வருடக் காதல் வெறும் கனவாய்க் கரைந்ததில் பெருத்த ஏமாற்றம் கதிருக்கு. உண்மையாய் காதலிப்பவனுக்குத்தான் பெண் சொந்தம் என்று  அறிவுரைகள் சொல்கிறார்கள். படமெடுக்கிறார்கள். ஆனால் நிஜ வாழ்க்கையில் அப்படி நடப்பதில்லை. இந்த நான்கு வருடங்களில், மனதுக்குள்ளேயே
அவளை பூஜித்தது தான் மிச்சம். என்னைவிட வேறு எவனால் அவளை அதிகமாக விரும்பியிருக்க முடியும்.  அந்த காதலில் என்ன குறை வைத்தேன்.
அவளைத்தவிர வேறு யாரும் முக்கியமல்ல என்றல்லவா இருந்தேன். அவளுக்காகவேதானே என் ஒவ்வொரு பொழுதையும் கடத்தினேன்.
அவளுக்காகக் காத்திருந்தேன். அவளையே பார்த்திருந்தேன். அவளைத் திருமணம் செய்யவே சம்பாதித்தேன். சேர்த்துவைத்தேன். நாளை எவனையோ  திருமணம் செய்யப்போகிறாள். அட்சதை போட்டுவிட்டு வரவேண்டியது தான். சே, என்ன வாழ்க்கை இது.


வெருப்பு அவனை முழுமையாகப் படர்ந்தது. அடுத்த இரண்டு நாட்கள் சைக்கிள் கடைக்கு விடுமுறை போர்டு போட்டுவிட்டு தனிமையை நாடினான்.
மனதிற்குள்ளாகவே புழுங்கித் தீர்த்தான். மனம் விட்டு அழுதான். வாழ்க்கை வெறுத்தது. அர்த்தமில்லாமல் போனதாகத் தோன்றியது. கதிர் தற்கொலை
செய்யுமளவிற்கு போக விரும்பவில்லை. ஆணாய் பிறந்திருக்கிறேன். எனக்கு விருப்பமான வாழ்க்கை எனக்குக் கிடைக்கவில்லை. பூமியில் பிறந்த
எத்தனை ஜீவன்களுக்கு அது கிடைத்திருக்கிறது? பரவாயில்லை. என் காதல் கனவாய்க் கரைந்து போனதற்கு இறைவனிடம் நிச்சயம் ஒரு காரணம்
இருக்கும். அவளுடன் வாழப் பயன்படாத தன் வாழ்க்கை, நல்லதொரு வாழ்க்கை வாழ வழியின்றி இருளில் கிடக்கும் யாருக்கேனும்
பிரயோஜனப்படட்டும். யாருக்கும் பிரயோஜனமில்லாமல் போவதைவிட, யாருக்கேனும் உபயோகமாய் இருக்கட்டும். பூமியில் தோன்றும் காதல்கள்
அத்தனையும் வென்றுவிடுகிறதா என்ன? எத்தனை பேர் அதிர்ஷ்டம் செய்திருக்கிறார்கள்? அதைவிட, எத்தனை பேருக்கு இன்று எனக்கிருக்கும்
வாழ்க்கை கூட கிடைக்காமல் போயிருக்கிறது. எத்தனை பேருக்கு என் வாழ்க்கை பயன்படும்? ஆம். அதுதான் சரி. யாருக்காவது பயன்படட்டும்.
எதற்காவது பயன்படட்டும்.
கதிர் நாளிதழ்கள் புரட்டினான். தனக்கென்று எதுவும் வேண்டாமென ஒதுக்கினான். அவனுக்குள் எந்த ஆசையும் நிறைவேறுவதற்கில்லை.
நிறைவேற்றிக்கொள்ள இனி எதுவும் மிச்சமில்லை. எல்லாம் முடிந்தது. ஆனால், இருக்கிற உடல், உயிர், வாழ்க்கை எதற்காவது பயன்படட்டும்.
அவளைக் கொண்டு நிரப்ப நினைத்திருந்த வாழ்க்கை, அவளையொத்த தூய்மையை, உண்மையை, நியாயத்தை, தர்மத்தை ஏற்கட்டும். திருமணத்திற்கென
நிற்கும் யாரோ ஒரு ஊனமுற்ற பெண் அல்லது கைம்பெண் யாருக்கேனும் தன் வாழ்க்கை அர்த்தத்தைத் தரட்டும் என்று புரட்டினான். இருபத்தியெட்டு
வயதில் ஒரு கால் செயலிழந்த பெண் ஒருத்தியின் விளம்பரத்தைப் பார்த்துவிட்டு அதில் குறிப்பிட்டிருந்த எண்ணைத் தொடர்புகொண்டான். பெண்ணின்
அப்பாதான் ஃபோனை எடுத்தார். வார‌ இறுதி நாளில் நேரில் வீட்டிற்கு பெண் பார்க்க வருவதாக தெரிவித்துவிட்டு, வீட்டு விலாசம் வாங்கிவிட்டு
தொடர்பை துண்டித்தான்.


மனது சற்றே லேசானது போல் இருந்தது. எதனால் என்று தெரியவில்லை. ஆனால், பூர்ணிமாவையே நினைத்துக்கொண்டு வாழ்க்கையை
சீரழித்துக்கொள்வதைவிட, ஊனமுற்ற பெண் ஒருத்தியின் வாழ்க்கை பிரகாசமாய் ஒளிர்ந்திட உபயோகப்படும் என்பதில், தன் வாழ்க்கை
அர்த்தப்படுவதாய் உணர்ந்தான். பூர்ணிமா என்ற தன் காதல் தன்னில் உருவாக்கிவிட்ட வெற்றிடத்தை, பூர்ணிமாவையொத்த தூய்மையான தியாகத்தைக் கொண்டு நிரப்பிக்கொள்வதில், பூர்ணிமாவுடனான காதலுக்கான தூய்மையை அடைந்து விட்ட மகிழ்வு மிஞ்சியது அவனுக்கு. இது ஒரு தவம். தியாகம்.
பூர்ணிமாவைத் திருமணம் செய்திருந்தால் கிடைத்திருக்கும் மனநிறைவை, இந்தத் தியாகம் ஈடு செய்யும் அல்லது அந்த மனநிறைவை அப்படியே
கொடுக்கும் என்பதாய் இருந்தது கதிரின் நம்பிக்கை. வார இறுதி நாள் வந்தது. வீடு சற்றே தொலைவில்தான். அரைமணி நேரப் பேருந்துப்
பயணத்திற்குப் பிறகு பெண் விட்டிற்கு அருகாமையிலேயே இறங்க முடிந்தது. தொலைப்பெசியில் பெண்ணின் அப்பா சொன்ன விலாசத்தைத் தேடிச் சென்றான். அது ஒரு பழைய வீடு என்பது முதல் பார்வையிலேயே தெரிந்தது. சுவற்றில் விரிசல் விட்டிருந்தது. பெயிண்ட் அடித்து வருடங்கள்
பலவாகியிருந்தன. தரைதளம் மட்டுமே. வீட்டு எண்ணை ச‌ரிபார்க்க‌ அருகே சென்ற‌போதுதான் அது காதில் விழுந்த‌து. ஐம்பதைக் கடந்த ஒரு ஆணின்
குரலும், இருபதில் ஒரு பெண்ணின் குரலும்.
'அப்ப‌டியெல்லாம் இருக்காதுமா'.
'இல்ல‌ப்பா, உங்க‌ளுக்குத் தெரியாது. நான் நொண்டி. அவ‌னுக்கு அப்ப‌டியில்ல‌. க‌ல்யாண‌த்துக்கு அப்புற‌ம் அவ‌னுக்கு என்னைத் த‌விர‌ வேற‌ எல்லா
பொண்ணும் அழ‌கா தெரிய‌லாம். இன்னொரு ஊன‌மில்லாத‌ பொண்ண‌ப் பாத்து ஆச‌ப்ப‌ட‌லாம். வேணாம்ப்பா. என‌க்கு பாக்குற‌ பைய‌னையும் என்ன‌
மாதிரியே ஊன‌மா பாருங்க‌பா'.
கேட்டுக்கொண்டிருந்த க‌திர் சிலையாகிவிட்டிருந்தான்.


Monday, February 7, 2011




டகங்களில்ஈழம் பற்றிய செய்திகள் தாறுமாறாக வெளியாகிக்கொண்டே இருந்தன. இந்தியாவில்தேர்தல் முடிவுகளை மக்கள் அறிந்துகொண்டிருந்த நேரம். மே 16-ந் தேதிசனிக்கிழமையன்று வன்னிக் காட்டில் பாரிய அளவிலான திட்டம் ஒன்றிற்குத்தயாராகியிருந்தனர் விடுதலைப் புலிகள்.


நெருங்கிவரும் சிங்கள ராணுவ வளையத்தை ஊடறுத்துத் தாக்கி, புலிகளின் முக்கியத்தலைவர்கள் வெளியேறுவது என்பதுதான் அந்தத் திட்டம். புலிகளுக்கேயுரிய போர்வியூகங்களின்படி நடந்த இந்த ஊடறுப்புத் தாக்குதலில் 100க்கும் அதிகமானசிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், பிரபாகரனின்சமகாலத் தலைவரான சொர்ணம் இந்தத் தாக்குதலில் ராணுவத்தினரால் கொல்லப்பட,புலிகளின் முயற்சி தோல்வியடைந்தது.

களத்தில்இழப்புகள் சகஜமானதுதான் என்பதைப் புலிகள் அறிவார்கள். ஆனால், தங்களின்இலட்சியமான தமிழீழத் தாயகம் அமைவதற்கு எதை இழக்கவேண்டும் எதைக் காப்பாற்றவேண்டும் என்பதிலும் அவர்கள் கவனமாக இருப்பார்கள். அதனால், மே 17-ந்தேதியன்று புலிகளின் மூத்த தளபதிகள் அனைவரும், தங்களுக்கு வழக்கமாகக்கட்டளையிடும் பிரபாகரனிடம், கோரிக்கை வடிவில் ஒரு கட்டளை பிறப்பித்தனர்என்கிறார்கள் தொடர்பில் உள்ள வட்டாரத்தினர்.

தமிழீழத்தேசியத் தலைவர் அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டிய தருணம் இது.ஏணென்டால், சிங்கள ராணுவம் தனது பாரிய படைகளோடு நெருங்கி விட்டது. இதுஇந்தப் போரின் இறுதிக்கட்டம். இதிலிருந்து தலைவர் அவர்கள் மீண்டால்தான்அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்க முடியும். நம்முடைய இலட்சியமானதமிழீழத்தை வென்றெடுக்க முடியும் என்று தளபதிகள் சொன்னதை பிரபாகரன்ஏற்றுக் கொள்ளவில்லையாம். நமது மண்ணின் விடுதலைக்காகத்தான் நான்போராடுகிறேன். அதனால் கடைசிவரை இந்த மண்ணில்தான் இருப்பேன் என பிரபாகரன்உறுதியான குரலில் கூற, தளபதிகள் அவரிடம் நீண்ட நேரம் வாதாடியுள்ளனர். இந்தமண்ணில் உங்கட மகன் நின்று போராடட்டும். எங்கட தலைவராகிய நீங்கள்பாதுகாப்பான இடத்துக்குப் போயாக வேண்டும். அப்போதுதான் இந்தப் போராட்டம்எழுச்சியோடு தொடரும் என்று தங்களுடைய கோரிக்கைக்கு அழுத்தம்கொடுத்திருக்கிறார்கள்.

தளபதிகளின்கோரிக்கையை யோசித்த பிரபாகரன், தனது மகன் சார்லஸ் அந்தோணியை ஈழமண்ணில்இருக்கச் செய்து போரை தொடர்ந்து நடத்தச் சொல்லிவிட்டு, தளபதிகள்கூறுவதுபோல, அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற நீண்ட யோசனைக்குப்பின்சம்மதித் துள்ளார்.

இதையடுத்து,மே 17-ந் தேதி ஞாயிறன்று இந்தியாவின் ஆங்கில ஊடகங்களில் ஈழநிலவரம்குறித்து சிங்கள அரசு பரப்பிய தகவல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த நேரத்தில், புலிகள் ஒரு பெருந் தாக்குதல் திட்டத்திற்குத்தங்களைத் தயார்படுத்தியிருந்தனர் என்கிறது கள நிலவரம். மிகச் சரியாகவியூகம் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட அந்தத் திட்டம் இதுதான் என்றும்அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

5000கிலோ வெடிமருந்துகளை தங்கள் உடலில் கட்டிக்கொண்டு 30-க்கும் அதிகமானகரும்புலிகள் ஊடறுப்புத் தாக்குதல் நடத்துவது என்ற திட் டத்தின்படிஇருவரணி, மூவரணியாக கரும்புலிகள் பிரிந்து, முன்னேறி வந்த சிங்களராணுவத்தினர் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்தினர். விடுதலைப்புலிகளின்மற்ற படையணியினரும் சரமாரியாக சுட்டுக்கொண்டே ராணுவத்தை எதிர்த்துவீரச்சமர் புரிந்தனர்.

தொடர்ந்துமுன்னேற்றம் கண்டு வந்த சிங்கள ராணுவம் இதனை எதிர்பார்க்க வில்லை. தங்கள்உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தலைவரைப் பாது காப்பதற்கான ஊடறுப்புத்தாக்குதலில் ஈடுபட்ட புலிகளை ராணுவத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை.இருதரப்பிலும் கடும் சண்டை நடந்த அவ்வேளையில், வெடிமருந்துகளுடன் பாயும்புலிகளைக் கண்டு ராணுவம் சிதறியது. இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி,பிரபாகரனை அங்கிருந்து பாதுகாப்பாக கொண்டு சென்றனர் தளபதிகள்.

புலிகளின்வசமிருந்த கடல்பகுதியில் போர்த்துகீசியர்கள் காலத்தில் கட்டப் பட்டிருந்தகோட்டை ஒன்று உண்டு. அந்தக் கோட்டைக்குள் பிரபாகரனை அழைத்துச் சென்றனர்.அந்தக் கோட்டையின் கீழ்ப் பகுதியில் பழையகாலத்து சுரங்கப்பாதை உள்ளது.அந்த சுரங்கப்பாதை வழியாக பிரபாகரனை முள்ளிவாய்க்கால் கடற் பகுதிக்குஅழைத்துச்சென்றனர். அங்கே கடற்புலிகளின் படகு தயாராக இருந்தது. அதில்பிரபாகரனை ஏறச் செய்தனர்.

அதேவேளையில்,வன்னிக்காட்டில் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது. அப்போது, இன்னொருதற்கொலைப் படையும் படையணியும் வீரம் செறிந்த தாக்குதலைத் தொடர்ந்தது.மீண்டும் ராணுவத்தினர் சிதற, அந்தத் தருணத்தில் பொட்டு அம்மான்பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். அப்போது திறம்படக் களமாடியவர் சார்லஸ்அந்தோணி. புலிகளின் தாக்குதலில் சிதறி ஓடுவதும், மீண்டும் ராணுவம் தாக்கவருவதுமாக வன்னிக் களம் அதிர்ந்து கொண்டிருந்த நிலையில், கடற்புலிகளின்தளபதியான சூசையை பாதுகாப்பாக வெளியே அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

தன்குடும்பத்தின் மீது அதிகப் பாசம் கொண்டவர் சூசை. அவரது மனைவியும் 17 வயதுமகளும் ராணுவத்தின் பிடியில் சிக்கி சில நாட்கள்தான் ஆகின்றன. மனதைகல்லாக்கிக்கொண்டு, இலட்சி யத்தின் அடுத்த கட்டத்தை அடைவதற்காகபாதுகாப்பாக வெளியேறினார் சூசை.



புலிகளின்அடுத்தடுத்து 23 தற்கொலை தாக்குதல் சம்பவங் களால் இரண்டாயிரத்திற்கும் அதிகமான சிங்கள ராணுவத்தினர் செத்து விழுந்தனர். இந்தத் தாக்குதல்களைமுன்னின்று நடத் திய பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி, சிங்களராணுவத்தின் தாக்குதலுக்குள்ளாகி களப்பலி யானார். புலிகளின் கடைசிநேரஅதிரடித் தாக்குதல், சிங்கள ராணுவத்தின் 58-வது டிவிஷனை நிலைகுலையவைத்தது. புலிகள் அடிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற பயபீதியில்ராணுவத்தினர் சிதறி ஓடினர்.வன்னிக்காடு புகை மண்டலமானது. கடைசி இலக்கைநெருங்கிவிடலாம் என நினைத்த ராணுவத்தின் கண்களை கரும்புகை மறைத்து,முன்னேற் றத்தை முடக்கியது.


இதனால்பிரபாகரனையும் பொட்டு அம்மான், சூசை ஆகி யோரையும் பாதுகாப்பாகவெளியேற்றுவது சாத்திய மானது. அவர்கள் தனித்தனி படகில் ஒருவர் பின்ஒருவராகப் பயணித்தனர். கடற்புலிகள் பயன் படுத்தும் படகுகளின் வேகம் சிங்களராணுவத்தை மிரள வைக்கக்கூடியது. உதாரணத்திற்கு, ராமேஸ்வரத்திலிருந்துஇலங்கைக்குச் செல்ல வேண்டுமென்றால் 12 நிமி டங்களில் அந்தப் படகின்மூலமாகச் சென்று விட லாம். மின்னல் பாய்ச்சலில் செல்லும் அத்தகையபடகுகளில் பிரபாகரனும் முக்கியத் தளபதிகளும் பயணித்து, இலங்கையி லிருந்துகிழக்குத் திசை நோக்கி 3 மணி நேரப் பய ணத்தில் பாதுகாப்பான இடத்தைஅடைந்துள்ளதாக கள நிலவரங் கள் தெரிவிக்கின்றன.

சிங்களகடல் எல்லைக்குட்பட்ட ராணுவக் கப்பல்களை ஏமாற்றி விட்டுச் செல்வதுபுலிகளுக்கு கைவந்த கலை. அதே நேரத்தில், சர்வதேச கடல் எல்லையில்இலங்கைக்காகத் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டிருக்கும் இந்தியக் கடற்படைக் கப்பல்களின் கண்ணில் மணலை அள்ளிக்கொட்ட முடியுமா என்ற தயக்கம்புலிகள் தரப்பிலேயே இருந் திருக்கிறது. ஆனால், இந்தியக் கடற்படைக்குஏற்கனவே உரிய உத்தரவுகள் இடப்பட்டிருந்தன. இலங்கையிலிருந்து வெளியேறும்படகுகளைப் பிடித்துக் கொடுப்பது நமது வேலையல்ல என்பதுதான் அந்த உத்தரவு.பலவித பிரஷர்களால் இந்த உத்தரவு இடப்பட்டிருந்தது. அதனால், அந்த மின்னல்வேகப்படகு சீறிச் சென்றபோது, மேலிடத்து உத்தரவுக்கேற்ப இந்தியக் கடற்படைதனது செயல்பாடுகள் எதையும் மேற்கொள்ளவில்லையாம்.

ஞாயிறன்றுபுலிகள் மேற்கொண்ட இந்த வெற்றிகரமான ஊடறுப்புத் தாக்குதலுக்குப்பிறகுதான், திங்கட்கிழமையன்று காலையில் கடைசி நிலப்பரப்பையும்பிடிப்பதற்கான கொடூரத்தாக்குதலை சிங்கள ராணுவம் மேற்கொண்டது. பீரங்கிகள்,எறிகணைகள் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியபடியேமுன்னேறிய ராணுவம், பிரபாகரன் தங்கியிருப்பதாகத் தங்களுக்கு தகவல் வந்தபகுதியில் சகட்டுமேனிக்குத் தாக்குதல் நடத்தி கரும்புகை மண்டல மாக்கியது.எஞ்சியிருந்த புலிகளையும் அப்பாவி மக்களையும் சிங்கள ராணுவத்தின்ஆயுதங்கள் உயிர் குடித்தன.

அந்தத்தாக்குதலின்போதுதான், குண்டு துளைக்காத கவசம் கொண்ட ஒரு ஆம்புலன்ஸ்வண்டியில் பிரபாகரனுடன் பொட்டு அம்மான், சூசை ஆகியோர் தப்பிக்கமுயன்றதாகவும் அந்த வண்டிக்கு முன்னால் ஒரு வாகனத்தில் வந்த புலிகள்,ராணுவத்தை நோக்கித் தாக்குதல் நடத்தியதாகவும், பதில் தாக்குதலாக ராக்கெட்லாஞ்சர்களை ராணுவம் ஏவியபோது, பிரபா கரனும் தளபதிகளும் சென்ற ஆம்புலன்ஸ்வண்டி தாக்கப்பட்டு மூவரும் கொல்லப் பட்டதாகவும் சிங்கள அரசுமீடியாக்களுக் குப் பரப்பியது. அதனை இந்தியாவின் ஆங்கில சேனல்கள்நொடிக்கொரு முறை பரப்பிக் கொண்டி ருந்தன.



ஞாயிறுஇரவி லும் திங்கள் காலை யிலும் சிங்கள ராணுவம் நடத்திய கொடூரத்தாக்குதலில் புலிப்படையினர் பெரு மளவில் பலியாயினர். பிரபாகரன் உள்ளிட்டஅனைத்து தளபதி களின் கதையையும் முடித்துவிட்டோம் என சிங்கள அரசுகொக்கரித்துக் கொண்டிருந்தது. புலிகளை முற்றிலும் ஒழித்துவிட்டதாக பிரணாப்முகர்ஜியைத் தொடர்புகொண்டு ராஜபக்சே தெரிவித்தார்.


பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என இந்திய வெளியுறவுத்துறையும் நம்பியது. இதனை அத்துறையின் செய்தி தொடர் பாளரே பிரஸ் மீட்டில் தெரிவித்தார்.

வன்னிக்காட்டில்சிதறிக் கிடந்த புலிகளின் உடல்களை ராணுவத்தினர் வரிசையாக அடுக்கிவைத்திருந் தனர். சில உடல் கள் கருகியிருந்தன. பிரபாகரன் உள் ளிட்டபுலிகளின் முக்கியத் தலைவர் களை அடையாளம் காண்பதற்காக கருணாவைகொழும்பிலிருந்து தனி ஹெலிகாப்டரில் அழைத்து வந்தது சிங்கள ராணுவம்.புலிகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் இருந்த கருணா,அவர் கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டார்கள் என்ற தகவலைக் கேட்டு,உற்சாகமாகத்தான் காட்டுப்பகுதிக்கு வந்தார். வரிசையாகக் கிடத்தி வைக்கப்பட்டிருந்த சடலங்களைப் பார்த்த அவருக்கு அதிர்ச்சி.

சிங்களராணுவம் கொன்றதாகச் சொல்லப்பட்ட புலிகளின் தளபதிகளில் ஒருவரின் உடலைக்கூடகருணாவால் அங்கு பார்க்க முடியவில்லை. உதட்டைப் பிதுக்கிவிட்டுத்திரும்பிய கருணா, "மொக்கச் சிங்களனுங்க கோட்டை விட்டுட்டானுங்க' எனத் தனதுசகாக்களிடம் சொல்லி யிருக்கிறார்.

இந்தநிலையில், செவ்வாயன்று காலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றியஅதிபர் ராஜபக்சே, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி எதுவும்சொல்லாதது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. பகல் 12 மணியளவில்,நந்திக்கடல் பகுதியில், தலையில் சுடப்பட்ட பிரபாகரனின் உடல் கிடந்ததாகசிங்கள ராணுவம் அறிவித்து, தான் எடுத்த சில க்ளிப்புங்கு களைமீடியாக்களுக்குக் கொடுத்தது.

பிரபாகரனின்தோற்றத்தை விட மெலிந்திருந்தது உடல். அவர் கையில் எப்போதும்கட்டியிருக்கும் வாட்ச் இல்லை. கழுத்தில் கயிறு அணிந்து பாக் கெட்டில் சயனைடு குப்பி வைத்தி ருப்பது வழக்கம். ஆனால், சிங்கள ராணுவம் காட்டியபடத்திலோ சயனைடு குப்பி இல்லை. ஐடென்ட்டி கார்டு காட்டப்பட்டது. இப்படி பலமுரண்பாடுகளைக் கொண்ட க்ளிப்புங்கு களைக் காட்டியதுடன், மதியம் கண்டுபிடிக்கப்பட்ட உடலை ஒரு சில மணிநேரத்தில் டி.என்.ஏ சோதனை மூலமாகஉறுதிப்படுத்தி விட்டதாகவும் சிங்கள அரசு தம்பட்ட மடித்தது.

தண்ணீரில்கிடந்த உடல் எனச் சொல்லப்பட்ட நிலையில் கைகள் மட்டும் ஊறியிருக்க, முகம்நன்கு ஷேவ் செய்யப்பட்ட நிலையில் மொழுமொழுவென இளவயது பிரபாகரன் போல்இருந்தது. இது எப்படி சாத்தியம் என்பதை தசாவதாரம் படத்தில் மாஸ்க் அணிந்தகமலை பத்து கெட்டப்புகளில் பார்த்த தொழில்நுட்பம் அறிந்தவர்களால் விளக்கமுடியும் என்கிறார்கள் தடயவியல் துறையினர்.

சிங்களஅரசின் பிரச்சாரத்தை ஊடகங்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருந்தவேளையில், நக்கீரனின் தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம் கிடைத்திருக்கும்உறுதி யான தகவல், உலகத் தமிழர்களின் நேசத்திற்குரிய விடுதலைப்புலிகளின்தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதுதான். பிர பாகரனின் மனைவி,மகள், இரண்டாவது மகன் ஆகியோர் பாதுகாப்பாக வெளிநாட்டில் உள்ளனர்.

தன்னுடையபாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர ஏற்படுத்திக்கொண்டபிறகு , பிரபாகரனேஊடகத்தில் தோன்றி உரையாற்றுவார். அதுவரை சிங்கள ராணுவம் தனது தரப்புச்செய்திகளை பரப்பிக்கொண்டிருக்கும். பிரபாகரன் ஊடகங் களில் உரையாற்றும்போதுசிங்கள அரசின் மாஸ்க் முகம் அம்பலத்திற்கு வரும் என்கி றார்கள் மிகமிகமுக்கியமானவர்கள். நக்கீரனுக்கு கிடைத்துள்ள இந்தத் தகவல், ஆயிரம் மடங்குநம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை வாசகர்களிடம் உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

psamp87@gmail.com

தனியார் காப்பீடுகளின் நிஜமுகம்

தனியார் துறையும், பொதுத்துறையும் காப்பீட்டு நலத்திட்டங்களில் எந்த அளவுக்கு நன்மைகள் செய்கின்றன என்பது நெசவாளர் நலத்திட்டங்கள் மூலம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன.  தனியார் பன்னாட்டு நிறுவனமான "ஐசிஐசிஐ ஆரோக்கிய காப்பீடு' திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கிடைத்த தகவலின் படி 2008-2009-ம் ஆண்டு வரையில் 2,89,023 நெசவாளர்கள் மத்திய, மாநில அரசுகளால் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.  நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள நெசவாளர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களிலிருந்து ஓரளவு காப்பாற்றும் திட்டமாக மத்திய, மாநில அரசுகளால் 2005-2006-ம் ஆண்டு முதல் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.  நெசவாளர்கள் சார்பில், மத்திய, மாநில அரசுகள், உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு ரூ. 781.60 பைசா செலுத்துகின்றன. இதன்படி இத்திட்டத்தில் உள்ள உறுப்பினருக்கோ அல்லது அவருடைய குடும்பத்தாருக்கோ ஏற்படுகிற நோயின் தன்மைக்கேற்ப ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ. 15 ஆயிரம் வரை மருத்துவ உதவிகள் பெற்றுக்கொள்ளலாம் என்பதுடன், ரூ. 7,500 வரை வெளி நோயாளிகளாக இருப்பவர்களும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என இத்திட்டம் கூறுகிறது. இத்திட்டத்தில் உறுப்பினர்களாகச் சேர்ந்தவர்களுக்கு "பணமில்லா அட்டை' என அச்சடிக்கப்பட்ட லோம்பார்டு கார்டு வழங்கப்படுகிறது.  சமீபத்திய தகவலின்படி தேசிய அளவில் 2.24 கோடி உறுப்பினர்களுக்கு லோம்பார்டு மருத்துவ அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது. மிகப்பெரும் தொகையை ஆண்டுதோறும் சந்தாவாகப் பெற்ற இந்நிறுவனம் திட்டத்தில் கூறியுள்ளபடி மருத்துவ உதவி செய்வதில்லை!  தனியார் நிறுவனங்கள் என்றாலே முதலில் லாபம், பிறகுதான் சேவைகள் என்பது பால பாடமாக இருந்தாலும், இந்த விஷயத்தில் ஐசிஐசிஐ நிறுவனம் அப்பட்டமாக நெசவாளர்களை ஏமாற்றி வருகிறது. சாதாரண காய்ச்சலுக்கு மருத்துவரிடம் சென்று ஊசி போட்டு மருந்துகளை வாங்க ரூ. 500 செலவாகிறது என்றால், அதனை லோம்பார்டு நிறுவனம் மூலமாகப் பெற மருத்துவரிடம் அதற்கென உள்ள கிளைம் படிவம் பூர்த்தி செய்யப்பட்டு, மருந்துகள் வாங்கியதற்கான ரசீதுகள் அனைத்துக்கும் மருத்துவரின் சான்றொப்பமிட்டு லோம்பார்டு நிறுவனத்தின் களப்பணியாளர்களிடம் கிளைம் படிவங்கள் கொடுக்கப்படுகின்றன. களப்பணியாளர்களும் ஆவணங்கள் சரியாக உள்ளதா எனச் சரிபார்த்து அதன் பின்னரே தங்களது நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கின்றனர்.  எல்லாம் சரியாக நடந்துவிட்ட திருப்தியில் உதவித்தொகை கிடைக்கும் என நெசவுத் தொழிலாளி காத்திருந்தால் ""படிவம் பெற்றுக்கொள்ளவில்லை'' என்று கணினி மூலம் தட்டச்சு செய்த கடிதம் கூறுகிறது.  பயனாளிகள் அளிக்கக்கூடிய கிளைம் படிவங்கள் சரியாக இருக்கிறது என்பதால்தான் களப்பணியாளர்கள் லோம்பார்டு நிறுவனத்துக்கு அனுப்புகின்றனர். ஆனால், லோம்பார்டு காப்பீட்டு நிறுவனம் பொய்களைச் சொல்லி மருத்துவ உதவிகளை நிராகரிக்கிறது!.  ரூ. 500 பெறுவதற்கு மருத்துவரிடம் கால்கடுக்க நின்று கையெழுத்து வாங்கி அனுப்பி வைத்த நெசவாளி லோம்பார்டு காப்பீட்டு நிறுவனத்தின் உதவி போதும் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டு சோர்வடைந்து போகிறான். சில கிளைம்களுக்கு அதிசயமாகப் பணம் வந்துவிடுவதும் உண்டு. சில கிளைம்களுக்குப் பயனாளிகளின் இனிஷியல் மாற்றி எழுதுவது போன்றவற்றால் காசோலைகள் மாற்றப்படாமல் திரும்ப அந்நிறுவனத்துக்கே அனுப்பப்பட்டு அவை மாதக்கணக்கில் திரும்புவதில்லை. இவ்வளவு குளறுபடிகள் இருந்தும் ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் பிரிமீயத் தொகைகளை மத்திய, மாநில அரசுகளிடமிருந்து ஐசிஐசிஐ காப்பீட்டு நிறுவனம் பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.  இதே காலகட்டத்தில் இந்திய பொதுத்துறை நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் நெசவாளர்களுக்காக ""மகாத்மா காந்தி புங்கர் பீம யோஜனா'' என்கிற நலவாழ்வு திட்டம் ஒன்றைத் தொடங்கி கடந்த ஏழு ஆண்டுகாலமாக மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்போடு செயல்படுத்தி வருகிறது.  இதன்படி மத்திய அரசின் பங்காக நெசவாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் ரூ. 150, இந்திய ஆயுள் காப்பீட்டு கழக பங்காக ரூ. 100 , நெசவாளர் சார்பில் மாநில அரசே கடந்த 2004-2005 ஆண்டு முதல் ரூ.80-ம் செலுத்தி வருகிறது. மொத்தமாக ஆண்டு ஒன்றுக்கு நெசவாளர் கணக்கில் ஒருவருக்கு ரூ. 330 பெற்றுக்கொள்ளும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம், தனது திட்டத்தில் கூறியுள்ளபடி மிகச் சரியான முறையில் இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் சேர்ந்த நெசவாளர்களது குடும்ப மாணவ, மாணவியருக்கு 9- முதல் 12-ம் வகுப்புவரையில் ஒவ்வோர் கல்வியாண்டிலும் ரூ. 1,200 வழங்கப்படுகிறது. இதோடு 60 வயதுக்குள் இறக்க நேரிட்டால் ரூ. 60,000 அவர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படுகிறது.  தமிழகத்தில் மட்டும் இத்திட்டத்தில் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் பேர் உறுப்பினர்களாகச் சேர்ந்து பயனடைந்து வருகின்றனர்.  இத்திட்டத்தில் உதவிகள் பெற சற்று காலதாமதம் ஆகிறதே தவிர, விண்ணப்பித்த அனைவருக்கும் முறையாகப் பண உதவி வந்து சேருகிறது. லோம்பார்டு காப்பீட்டு நிறுவனம்போல விண்ணப்பங்களை நிராகரித்து ஏமாற்றுவது கிடையாது.  எல்.ஐ.சி. என்கிற இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் மக்களின் சொத்து மட்டுமல்ல, அது இந்த தேசத்தின் சொத்து! லாப நோக்கம் கருதாமல் மகாத்மா காந்தி புங்கர் பீமா யோஜனா திட்டத்தில் என்ன கூறப்பட்டிருக்கிறதோ அதை அப்படியே பின்பற்றுகிறது!  லாப நோக்கம் மட்டுமே தனியார் துறைகளின் லட்சியம் என்பதால் லோம்பார்டு காப்பீட்டு நிறுவனம் தன்னுடைய பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது. மத்திய அரசின் பங்களிப்பு நிதி இல்லாமல், தமிழக அரசு நடத்தும் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டமும், ஸ்டார் ஹெல்த் என்கிற தனியார் நிறுவனம் மட்டுமே லாபம் பார்க்கிற திட்டமாக மாறியிருக்கிறது. இதைத்தான் கடந்த ஆண்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை நமக்குச் சொல்கிறது!  ஸ்டார் ஹெல்த் என்கிற தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு தமிழக அரசு முதலாம் ஆண்டில் ரூ. 628.20 கோடி செலுத்தியிருக்கிறது. கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பயன்பெற்ற பயனாளிகள் சார்பில் பல்வேறு மருத்துவமனைகளுக்கு ஸ்டார் ஹெல்த் நிறுவனம் செலுத்தியிருக்கிற தொகை ரூ. 415.43 கோடிதான்! அதாவது மக்களின் வரிப்பணம் தமிழக அரசே முன்வந்து ஸ்டார் ஹெல்த் நிறுவனத்துக்கு ஆண்டொன்றுக்கு ரூ. 200 கோடி லாபமாக வழங்கியிருக்கிறது! நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் ரூ. 100 கோடி செலவில் இதே தமிழக அரசு திருவாரூரில் மருத்துவ கல்லூரியைப் புதியதாகத் தொடங்கியிருக்கிறது.  இந்நிலையில் இரண்டாவது ஆண்டில் அந்த தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு ரூ. 750 கோடி ஒதுக்கியிருக்கிறது! கலைஞர் காப்பீட்டு அட்டை யாருக்குப் பயன்படுகிறது என்பதை தமிழக அரசு யோசிக்க வேண்டும்.  வண்ணத்தொலைக்காட்சி பெட்டியில் வண்ணமயமாக கலைஞர் காப்பீட்டு விளம்பரத்தில் திடீரென ஒருவருக்கு நெஞ்சு வலி வரும்போது,கலைஞர் காப்பீட்டு அட்டையை காட்டினாலே உயிர் பிழைத்துக்கொள்ளலாம் என காட்டப்படும். இது விளம்பரத்துக்கு வேண்டுமானால் சுவையாக இருக்கும்! ஆனால் நிஜத்தில் நெஞ்சு வலியுடன் செல்லும் ஒருவர் காப்பீட்டுக்கு உள்பட்ட மருத்துவமனைக்குள் நுழைந்தால் குறைந்தபட்சம் ரூ. 25,000 கட்ட வேண்டும். நோயாளிக்கு எதனால் நெஞ்சு வலி வருகிறது, என்ன சிகிச்சை மேற்கொள்ளலாம் என்கின்ற பரிசோதனை செய்வது எல்லாம் நோயாளியின் பணத்தில்தான்!  பரிசோதனைக்குப்பிறகு இதய அறுவை சிசிச்சைதான் தீர்வு என மருத்துவர்கள் முடிவெடுத்தால் ரூ. 1 லட்சத்துக்குள் என்ன அறுவை சிகிச்சையோ அதை மட்டும் செய்து இரண்டொரு நாளில் நோயாளியை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்.  அதற்குப் பிறகு வரும் எல்லா விளைவுகளுக்கும் அந்த நோயாளியே பொறுப்பேற்க வேண்டும். தொடர்சிகிச்சை அவசியம் என்றால் அந்த நோயாளிதான் செலவழிக்க வேண்டும். இதுதான் உண்மை நிலை! இது எப்படி சாமானிய மக்களுக்கான உயர் சிகிச்சைத்திட்டம் என்பது தெரியவில்லை.  தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் சுரண்டும் மக்கள் வரிப்பணத்தில் ஆட்சியாளர்களுக்கும் பங்கு இருப்பதால்தான் எல்லா அவலங்களும் இடம்பெறுகின்றன. சட்டபூர்வமாக - விஞ்ஞான ரீதியாக ஊழல் நடக்கிறது.  

 psamp87@gmail.com